ஒரு முறை நானும் எனது நண்பரும் படம் பாக்க சென்றோம். அந்தப் படம் வங்காளி மொழியில் கபூர்ஷ்வா இனத்தவர்களைப் பற்றிய அண்டாகுஜ நாட்டில் எடுக்கப்பட்ட குறுஞ்செய்திப் படம். ரஹ்மான் இசையமைத்திருந்தார். என் நண்பர் பெயர் ஜாஷி. நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே வரும் பொழுது இந்தப் படத்தில் எந்தப்பாடல் ஹிட் ஆகும் என்றேன். நீ பிரம்மத்தை ஒத்துக்கொள்வாயாக என்றான் என் நண்பன். நான் சொன்னேன் ஓம் அப்படியே ஆகுக. கத் மத். மேலும் என் நண்பன் கேட்டான் இந்தப்படத்தில் எந்தப்பாட்டு ஹிட் ஆகும் என்று. நான் சொன்னேன் இந்தப்படத்தில் தான் பாட்டே இல்லியே, இது ஒரு குறுஞ்செய்தி படமாச்சே என்றேன். அதற்கு அவன் சொன்னான் நீ பிரம்மத்தின் மூலமாக பார்த்து சொல்வாயாக என்றான். அப்படியானால் ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ பாடல் தான் ஹிட் ஆகும் என்றேன் நான். அவன் எப்படி சொல்கிறாய் என்றான். இதில் தான் ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோன்னு பின் நவீனத்துவமான வரிகள் இருக்கு அதனாலத்தான் இந்தப்பாடல் ஹிட்டாகும்ன்னு சொல்றேன் என்று சொன்னேன் . ஒட்டகத்த கட்டிக்கிறதுக்கும் கெட்டியாக ஒட்டிக்கிறதுக்கும் பின்நவீனத்துவத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிற மிக மிக விந்தையான கேள்வியை அவன் கேட்டான். அவன் அப்படிக்கேட்டிருக்கக்கூடாதுதான். பின் நவீனத்துவம் பாடல் வரிகளில் இல்லை, அவர் அவர் யோசிக்கும் முறையில் தான் இருக்கிறது என்கிற விளக்கத்தை அவனுக்கு கொடுத்தேன், மேலும் அவர் இசையமைத்த விதத்தில் தான் பின்நவீனத்துவம் இருக்கிறது என்றேன். புரிந்துகொண்ட அவன் ஆம் அப்படியே ஆகுக என்றான்.
வீட்டுக்கு சென்றவுடன் அந்த மடப்பய மவனான என் நண்பன் மேலும் தெளிவாக புரிந்து கொள்வதற்கு ஏதுவாக கீழே இருக்கும் சுட்டியையும் ஈ மெயிலில் பின் நவீனத்துவமாக அனுப்பினேன்:
இது ஒரு பின்நவீனத்துவ இயல்பு. நவீனத்துவ இசை அந்த ஆளுமையின் தனிப்பட்ட இயல்பின் வெளிப்பாடு. ரஹ்மானுக்கென உறுதியான சட்டகம் ஏதுமில்லை. அவரது ஆளுமைக்குப் பதிலாக ஒரு கூட்டுவெளிப்பாடு அவர் வழியாக நிகழ்கிறது. அவ்வாறு பல்வேறு திறமைகள் முயங்க உயர்தொழிநுட்பம் உதவுகிறது. தமிழ் சினிமா நவீனத்துவத்துக்கே வராமலிருந்த காலத்தில் இசையை பின்நவீனத்துவ காலகட்டத்துக்குக் கொண்டு சென்றதே ரஹ்மானின் சாதனை.
மற்றொரு நண்பர், அவர் காங்கிரஸ்காரர். அவர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்கிற விந்தையான உண்மையை எனக்கு உணர்த்தினார். இந்த சுட்டியையும் எனக்கு அளித்தார்:
Anyway, Congrats தல. மேலே உள்ளதெல்லாம் பாத்தீங்கல்ல. இனியும் என்னென்ன சொல்லுவாய்ங்க பாத்திட்டே இருங்க. சாக்கிரதையா இருங்க.
4 comments:
//
அந்த மடப்பய மவனான என் நண்பன்
//
கவனிக்க.. சிறுபிள்ளைதனமான வாக்கியம் இது .
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.
Puriyalaina puriyalainnu sollanum!
முத்து,
check it out
Post a Comment