Friday, July 07, 2006

அசட்டு மனிதர்கள் - தேன்கூடு போட்டிக்கான சிறுகதை

I'm reading: அசட்டு மனிதர்கள் - தேன்கூடு போட்டிக்கான சிறுகதைTweet this!

குர‌ல்வ‌லை

(சிறுகதை)

ஊ...ஊ..ஊ...
நாய்கள் மிகப் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டிருந்தன. நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தால் கூட பயம் இராது. ஊளையிட்டுக்கொண்டிருந்தால் மனதிற்கு கிலி ஏற்படுத்தத்தான் செய்கிறது. அதுவும் இந்த அர்த்த ராத்திரியில்.
மணி என்ன இருக்கும்? நான் வரும்போதே 12:00 இருக்குமே?

அப்பாடா, எப்படியோ இந்த முறை சிரமப்பட்டேனும் நெல் அவித்தாகிவிட்டது. இனி ஒரு மூன்று மாதத்திற்கு கவலை இருக்காது. என் குடும்பம் மிக சிறியது. என் கணவர் நான் மற்றும் என் மூன்று வயது குழந்தை.

என் கணவர் மிகவும் அன்பானவர். அவருக்கு ஏகப்பட்ட கடன் தொல்லைகள். அதனால் குடிக்க ஆரம்பித்தார். அவர் எப்பொழுது குடிக்க ஆரம்பித்தாரோ அப்பொழுதிலிருந்து என்னை அடிக்கவும் ஆரம்பித்தார். அவர் குடித்தால் என்ன? அடித்தால் என்ன? அவர் என் கணவர். அதுவும் அன்பான கணவர். என் மூன்று வயது குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. எனது பக்கத்தில். கண்ணம்மா அந்தப் பக்கம் போகாதே! என்ன கிழே போய் குழ்ந்தைகளிடம் விளையாட வேண்டுமா? வேண்டாம் செல்லம். அதுகள் தான் உன்னைப் பார்த்தாலே கத்துகிண்றனவே? அப்புறம் பெரிய பிரச்சனையாகிவிடும். நாம் இந்த வீட்டில் இருக்க முடியாது. இங்கேயே விளையாடு கண்ணா. அம்மா சிறிது நேரத்தில் வேலையை முடித்துவிட்டு வந்து விடுகிறேன்.

இப்பொழுது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. எப்படி இந்த அண்டாவை மாடிக்கு தூக்கிக் கொண்டு வந்தேன்? அண்டா நிறைய அவித்த நெல். அதுவும் நன்றாக கொதித்த நீரில். கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து காயப் போட்டுக்கொண்டிருக்கிறேன். எப்படியும் இன்னும் அரைமணி நேரமாவது ஆகும்.
சுத்தமான பளீர் வெள்ளை நிற கவுன் அணிந்திருக்கிறாள் என் மகள். நானும் கூடத்தான் வெள்ளை சேலை.இப்பொழுது புதிதாக வந்திருக்கும் மிஷெனில் துவைத்தது. முன்பெல்லாம் நான் தான் கைகளால் துவைப்பேன். இவர்கள் வந்த பின் சவுகரியமாக போய்விட்டது. வெள்ளை நிற கவுனில் தேவதை மாதிரி இருக்கிறாள் என் மகள். விளையாடட்டும். ஊ..ஊ...சே...இந்த நாய்கள் ஏன் இப்படிக் ஊளையிடுகின்றன? அவர் வந்துவிட்டால் இந்த நாய்களை விரட்டியடித்து விடுவார். வேகமாக முடித்துக் கொண்டு செல்ல வேண்டும். அவர் வந்து விடுவார். குறுக்கு வலிக்கிறது. இன்னும் குணிந்து நெல்லை நன்றாக பரப்பிவிடுகிறேன்.

கணவர் அடித்தாலும், என் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள், நான் ரேஷன் கடையில் அரிசி வாங்கி வரும்பொழுது, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார் என் கணவர். அவருக்கு பிடித்தமான என் சேலையை பேனில் கட்டி தற்கொலை செய்துகொண்டார். காற்று இதமாக வீசுகிறது. முடியப்படாத எனது கூந்தல் காற்றில் அலை பாய்கிறது. மல்லிகை மனம் வீசுகிறது. எங்கிருந்து வாசனை வருகிறது? நான் மல்லிகைப்பூ வைக்கவில்லையே. அன்றிலிருந்து எனக்கு என் மகள் தான் துணை. அவளுக்காகத்தான் நான் உயிர் வாழ்கிறேன். எங்கே எனது மகள்? காணவில்லையே? கீழே போய் விட்டாளா? 'செல்லம் எங்கேடா போய்ட்ட? எழுந்தேன். சுற்றிப்பார்த்தேன். மொட்டை மாடியிலே காணவில்லை. ஐயோ..எங்கே போனாள்? அதோ அங்கே..என்ன அது? அண்டாவின் வெளியே இரண்டு சின்னக் கால்கள் வானத்தை நோக்கிப் பார்த்தன. ஐயோ என் மகள்! மகளே..ஓடுகிறேன். கத்துகிறேன். கதறுகிறேன். நாய்கள் ஊளையிடுவதை நிறுத்திவிட்டன.கொதிக்கும் நெல் குவியலில்..அண்டாவுக்குள்...ஆ...ஆ....எனது தொண்டை அடைக்கிறது. விம்முகிறேன். என்னால் முடிந்த வரையில் கதறுகிறேன். தரையில் முட்டி முட்டி சாய்கிறேன். என் செல்லம்.. எழுந்து ஓடுகிறேன். மொட்டை மாடியிலிருந்து குதிக்கிறேன். எதற்காக வாழ வேண்டும்? எனது தலை நச்சென்று தரையில் மோதுகிறது. மூளை சிதறுகிறது. இரத்தம் வழிந்தோடுகிறது.

இப்பொழுது நானும் எனது கணவரும் என் மூன்று வயது குழந்தையும் சந்தோசமாக வாழ்கிறோம். கடன் தொல்லை கிடையாது. அவர் குடிப்பதும் இல்லை என்னை அடிப்பதுமில்லை.மணி என்ன இருக்கும்? நான் வரும்பொழுதே 12:00 இருக்குமே. அப்பாடா, எப்படியோ இந்த முறை சிரமப்பட்டேனும் நெல் அவித்தாகிவிட்டது. இனி ஒரு மூன்று மாதத்திற்கு பிரச்சினை இருக்காது.நான் நெல்லை காயப்போட்டுக்கொண்டிருக்கிறேன். எனது மூன்று வயது மகள் விளையாடிக்கொண்டிருக்கிறாள். அவர் வந்து விடுவார்.

எனது குழந்தையை அழைத்துக்கொண்டு மாடி படிகளில் இறங்கி கீழே வந்தேன். கீழே இரண்டு பையன்களும் ஒரு பெண்களும் இருந்தார்கள். பையன்கள் புத்தகத்தை மடியில் வைத்துக் கொண்டே தூங்கிக் கொண்டிருந்தார்கள். பெண் மட்டும் படித்துக்கொண்டிருந்தாள். நாளைக்கு பரிட்சையாக இருக்கும். என் குழந்தை சிரித்தது. நன்றாக சிரித்தது. அந்த பெண் மிரண்டு போய் நிமிர்ந்து பார்த்தது. பிறகு தன்னால் ஆன மட்டும் 'வீல்' என்று கத்தியது. சத்தத்தில் பையன்களும் முழித்துக் கொண்டு அவர்களும் கத்தினார்கள்.
இவர்களுக்கு இதே வேளையாகப் போய்விட்டது. அசட்டு மனிதர்கள். நான் மறுபடியும் மொட்டை மாடிக்கே சென்று விட்டேன், என் குழந்தையோடு. நெல் காயப்போடவேண்டுமே. என் செல்லத்திடம் இனிமேல் இப்படி சிரிக்காதே என்று சொல்லிவைத்தேன்.

**




Digg Technorati Delicious StumbleUpon Reddit BlinkList Furl Mixx Facebook Google Bookmark Yahoo

4 comments:

எண்ணம் எனது said...

நல்ல கதை.

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் OTHERS என்ற ஆங்கில படத்தை பாருங்கள். அதுவும் கிட்டதட்ட இதே கதை அமைப்பு கொண்டதுதான்

MSV Muthu said...

நன்றி. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அந்த திரைபடத்தை பார்க்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

Good one..

Anonymous said...

அய்யா,

ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் உடனடியாக போய் உங்கள் மனநிலையை செக்கப் செய்யவும். என்ன எழவெடுத்த கதைய்யா இது?. புருஷன் தூக்கு மாட்டிக்கிட்டான், குழந்தைய அண்டாவில வெச்சு வேக வெச்சாச்சு. தானும் தற்கொலை செஞ்சாச்சு. ஆர் யு சிக்?