Saturday, November 14, 2009

2009இல் சிறந்த கண்டுபிடிப்புகள் - TIME


குர‌ல்வ‌லை

மின்சாரக் கண்

MIT ஆராய்ச்சியாளர்கள் கண் பார்வையற்றவர்களுக்கு பெரிதும் பயன்படும் விதமாக ஒரு மைக்ரோ சிப் உருவாக்கிக்கொண்டுள்ளனர். இந்த மைக்ரோ சிப் முழுமையான கண்பார்வை கொடுக்காது எனினும்; முகங்களை அடையாளம் தெரிந்து கொள்ளவும்; எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு யார் துணையும் இன்றி பார்வையற்றவர்கள் நகர்ந்து செல்லவும் உதவுமாம்.

இந்த சிப் (தண்ணீர் பட்டு கெட்டுவிடாமல் இருக்க, டைட்டானியத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது) பார்வையற்றவர்களின் கண்களுக்குள் பொருத்தப்படும். அவர்கள் சின்ன காமெராக்கள் பொருத்தப்பட்ட கண்ணாடி அணிந்துகொள்ளவேண்டும். இந்த காமெரா தன் படங்களை கண்ணுக்குள்ளே பொருத்தப்பட்டிருக்கும் அந்தச் சிப்புக்கு அனுப்புமாம்; அந்த சிப் மூளைக்கு அனுப்புமாம்.

பத்து மில்லியன் மதிப்புமிக்க மின்சார விளக்கு
டச் நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பிலிப்ஸ் அமெரிக்காவின் Department of Energy's L Prize போட்டிக்குள் நுழைந்த முதல் கம்பெனி என்கிற பெருமை பெறுகிறது. நாம் எப்பொழுதும் உபயோகிக்கும் அறுபது வாட்ஸ் பல்புக்கு மாற்றாக LED பல்புகளைக் கண்டுபிடித்திருக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால் அமெரிக்கா வருடந்தோறும் தற்போது 17.4 மில்லியன் வீடுகளுக்கு தேவையான அளவு மின்சாரத்தை சேமிக்கமுடியுமாம். அதற்கும் பத்து மில்லியனுக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது, பிலிப்ஸ் L Prizeஐ வென்று விட்டால் அமெரிக்காவுடன் 10 மில்லியன் டாலர் விற்பனை ஒப்பதம் கிடைக்குமாம்.

பிலிப்ஸின் LED பல்ப் ஒரு அறுபது வாட்ஸ் பல்பு தரும் அதே அளவு வெளிச்சத்தைக் கொடுக்கும் ஆனாலு அறுபது வாட்ஸ் பல்பை விட இது பத்து வாட்ஸ் கம்மியாகப் பயன்படுத்தும்; மேலும் 25,000 மணி நேரம் உழைக்குமாம். அறுபது வாட்ஸ் பல்பைவிட 25 மடங்கு அதிகமான உழைப்பு!

20 டாலர் முட்டி
கால் இழந்த ஏழைகள் விலை மலிவான ஜெய்பூர் பொய் கால்களை உபயொக்கித்துக் கொள்ளலாம்.ஆனால் முட்டியை இழந்து விட்ட ஏழைகளுக்கு பத்தாயிரம் டாலர் செலவழித்துத் தான் ஒரு டைட்டானியம் முட்டியைப் பொருத்தவேண்டும். வேறு வழியே இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது ஸ்டான்பொர்ட் என்ஜினியரிங் மாணவர்கள் மிக மிக மலிவான விலையில் (இருபது டாலர்கள் மட்டுமே!) முட்டியைக் கண்டுபிடித்திருக்கின்றனர். இது அச்சு அசலாக நிஜ முட்டியைப் போலவே செயல்படுமாம். Jaipur foot groupஇன் உதவியோடு கண்டுபிடிக்கப்பட்ட இந்த முட்டியில்; உராய்தலைத் தவிர்ப்பதற்காக எண்ணெய் நிறப்பப்பட்ட நைலான் வைக்கப்பட்டுள்ளதாம்.

தற்பொழுது இதை இந்தியாவில் மூன்னூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்குப் பொருத்தி டெஸ்ட் செய்து வருகிறார்களாம்.

எய்ட்ஸ¤க்கு தடுப்பூசி
எய்ட்ஸ¤க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது என்றால் அது தான் மகத்தான கண்டுபிடிப்பாக இப்போது இருக்கமுடியும். எய்ட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகிவிட்டப்பிறகு தற்பொழுது அதற்கு தடுப்பூசி கண்டுபிடித்திருக்கின்றனர். ஆறு வருட சோதனைக்குப் பிறகு, ஒவ்வொருவருக்கும் இரண்டு முறை இந்த தடுப்பூசி போட்ட பிறகும், இது எய்ட்ஸை தடுக்கவில்லை என்றாலும், ஏற்கனவே எயிட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 31% பாதிப்பைக் குறைத்ததாம். ரத்தத்தில் உள்ள வைரஸ்களின் எண்ணிக்கை எந்த வகையிலும் குறையாமல் இருக்கும் பொழுது பாதிப்பு மட்டும் எப்படி குறைகிறது என்று விஞ்ஞானிகள் மண்டையைப்பிய்த்துக்கொள்கிறார்களாம். இந்த மருந்து இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், எய்ட்ஸ¤க்கான மருந்து கண்டுபிடிப்பின் பாதையில் இது ஒரு மைல்கள்.

எனக்குப் பிடித்தவை அவ்வளவே. மேலும் பல கண்டுபிடிப்புகளை இங்கே காணலாம்.

***
நவம்பர் ஏழு Carl Sagan day என்பது ஞாபகம் இருந்தும் மறந்துவிட்டேன். நானும் என் நண்பர் சஜித்தும் Carl Saganஇன் விசிறிகள்.

எனக்குப் பிடித்தமான அவரது ஒரு Quote:
"Somewhere there is something incredible waiting to be known"

எங்கோ நம்பமுடியாத ஏதோ ஒன்று நம் நம்பிக்கைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது!

Fantastic!

***




Digg Technorati Delicious StumbleUpon Reddit BlinkList Furl Mixx Facebook Google Bookmark Yahoo

மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு (ஐ லவ் இளையராஜா)


குர‌ல்வ‌லை

இந்தப்பாடல் எப்பொழுது கேட்டாலும் அதே நறுமணத்துடன் புத்தம் புதியதாக இருப்பது எனக்கு ஆச்சரியம். எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காத பாடல். இது போல ஒரு சிச்சுவேஷன் சாங் எனக்குத் தெரிந்து இல்லை. இது இளையராஜா பாடலா இல்லை ஜானகி பாடலா என்பதில் எனக்கு சிறு குழப்பம் எப்பொழுதுமே இருக்கும். ஆனால் உன்னிப்பாகக் கேட்டால் இது இருவரது பாடல் என்பது விளங்கும். Fantastic team work.

முதலில் முழுப்பாடலையும் கேளுங்கள் அப்புறம் எனக்கு பிடித்தமான இடங்களைக் கேட்கலாம்.



ஆரம்பமே அமர்களம்; முதலில் இளையராஜா தனது வேலையை முடித்துவிட்டு ஜானகியிடம் கொடுத்துவிடுகிறார்; ஜானகியின் ஹம்மிங்கும் பிறகு தூக்கலாக பொன்வானம் பன்னீர் தூவுது என்று சட்டென்று அவர் ஆரம்பிப்பதும் அருமை.


மறுபடி இளையராஜா;பிறகு மறுபடியும் ஜானகி. fantastic humming அப்புறம் லல்லலலா; பிறகு மறுபடியும் இளையராஜா; உன்னிப்பாகக் கவனித்தீர்கள் என்றால் இளையராஜா இரண்டு விதமான தாளம் பயன்படுத்தியிருப்பார்; மழைப்பூக்களே (பின்னால் ஒரு தாளம்) ஒதுங்க இடம் பார்க்குதே (வேறொரு தாளம்); மலர் அம்புகள் (முதல் தாளம்) உயிர் வரைக்கும் தாக்குதே (அதே இரண்டாம் தாளம்) அது தான் கடைசி வரையிலும் வரும்!



Best Part! ஜானகியின் லல்லல்லலாவும் இளையராஜாவின் பின்னனியும்; வெள்ளை மல்லிகை தேவ கண்ணிகை என்னும் இடத்தில் முற்றிலும் வேறு விதமான இசையைப் பயன்படுத்தியிருப்பார்.



My most favourite song!




Digg Technorati Delicious StumbleUpon Reddit BlinkList Furl Mixx Facebook Google Bookmark Yahoo

Thursday, November 12, 2009

குரல்வலைப் பக்கங்கள்


குர‌ல்வ‌லை

(புதிய பெயர், bureaucracy, பரிணாமவளர்ச்சித் தத்துவம், Intelligent Creator, உலகம் தட்டை, ஆன்மா, முன்பிறவிப் பாவங்கள்)


இது எப்பொழுதும் நான் எழுதும் படல்-நியூஸ்-புத்தகம்-கா·பி வகையறா பதிவு தான். பொதுப்படையான பெயர் ஒன்று வைத்திருக்கிறேன்.Just rebranding.புதிய பெயர். மைக்ரோசாப்ட் windows vistaவை rebrand செய்து windows 7 என்று பெயர் மாற்றி, அமோக விற்பனை செய்யவில்லையா? சிங்கப்பூர்க்காரர்கள் க்யூவில் நிறகத் தயங்காதவர்கள். ஐ·போன் 3GS வந்தபொழுது 50 டாலர் முன் பணம் செலுத்தி டோக்கன் பெற்றுப் பிறகும் மணிக்கணக்காக க்யூவில் நின்று வாங்கிய மக்களை எனக்குத் தெரியும். அதேபோல windows 7 வந்தபொழுதும் இங்கே மக்கள் க்யூவில் நின்று (உட்கார்ந்து; ரெஸ்ட் எடுத்து) வாங்கியதை டீவியில் பெரிதாகக் காட்டிக்கொண்டிருந்தனர்.ஹாரிப்பாட்டர் வந்தாலும் க்யூவில நின்னு வாங்கறாய்ங்க; windows 7ஐயும் க்யூவில நின்னு வாங்கறாய்ங்க. நம்ம ஊர்ல அரசியல் மீட்டிங்குக்கு காசும் பிரியாணியும் கொடுத்து கூட்டம் சேர்ப்பது போல இங்க டாலர்ஸ¤ம் நூடுல்ஸ¤ம் கொடுத்து க்யூவில நிக்க சொல்றாய்ங்களோ?

***

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருக்கும் இந்தியன் எம்பசிக்குச் சென்றிருந்தேன்; எதற்கு என்று ஞாபகமில்லை. க்யூ நம்பர் எடுத்துவிட்டு பொழுது போகாமல் அங்கிருக்கும் மக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நிறைய பேர் கேட்கும் கேள்வி பாரம் எங்கிருக்கிறது என்பது தான். அங்கு தான் இருக்கிறது கொஞ்சம் திரும்பிப்பாருங்கள் என்று தான் சொல்லவேண்டியிருக்கிறது. டென்சன். ஏன் டென்சன்? Afterall நீங்கள் உங்களுக்கு சர்வீஸ் செய்வதற்காக உட்கார்ந்திருக்கும் அலுவலர்களைச் சந்திக்க வந்திருக்கிறீர்கள். சிரிக்காதீர்கள்.

அப்படி நின்று சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொழுது இந்த சம்பவத்தைக் கவனித்தேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் தனது க்யூ நம்பர் வந்தவுடன் வேகமாக எழுந்து நடந்து வந்தார். அவரிடம் ஒரு பதற்றம் தெரிந்தது. அங்கே கண்ணாடிக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் அலுவலரிடம் தான் ரெடியாக வைத்திருந்த அந்த பேப்பர்களைக் கொடுத்தார். வாங்கிய அந்தப் பெண் அதே வேகத்தோடு அந்தப் பேப்பர்களைத் தூக்கிப்போட்டார். தூக்கிப்போட்டார். ஏதோ சொன்னார். எனக்கு கேட்கவில்லை. பதற்றத்துடன் அந்த ஆள் அந்தப் பேப்பர்களை எடுத்து பேப்பர் க்ளிப்பை எடுத்துவிட்டு மீண்டும் கொடுத்தார்.

***

இந்தியன் எம்பசியில் அன்று என் வேலையை முடித்துக்கொண்டு ஆபீஸ¤க்குச் செல்ல டாக்ஸி பிடித்தேன்.கொஞ்ச நேரம் கழித்து டாக்ஸி ஓட்டுனர் என்னிடம் பேச ஆரம்பித்தார். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி: உள்ளே இருக்கும் அலுவலர்களும் உங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே? பிறகு ஏன் அவர்கள் உங்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள்? எனக்கு தூக்கிவாரிப்போட்டது. டாக்ஸி டிரைவர் ஒரு சைனீஸ். நீங்கள் எதற்கு அங்கே போயிருந்தீர்கள் என்றேன். இந்தியாவுக்குப் போக வேண்டியிருந்தது அதற்காக விசாவுக்காச் சென்றிருந்தேன் என்றார். அடிக்கடி இந்தியா போய் வருவாராம்.

பிறகு இந்தியாவைப் பற்றி அவரே பெசத்துடங்கினார். இந்தியாவில கல்வி நல்லாயிருக்கு என்றார். பிரிட்டிஷ்காரர்களின் பாதிப்பு இன்னும் இந்தியாவில் இருக்கிறது என்றார். இந்தியாவுக்கு பிரிட்டிஷ் மூன்று விசயங்களைக் கொடுத்திருக்கிறது என்றார். என்ன என்று கேட்டேன்: கல்வி, ரயில்வே நெட்வொர்க் மற்றும் அதிகாரத்துவம் (bureaucracy).

***
ரொம்ப நாட்களுக்கு முன் இந்தியாவில் இருக்கும் பொழுது என் தோழி ஒருவரின் திருமணத்துக்குப் போயிருந்தேன். தோழியின் கணவரின் அப்பா ஒரு ஜட்ஜ். கிண்டி ரேஸ் கோர்ஸில் அவர்களது ரிஷப்சன் நடந்தது. அவ்வளவு பெரிய பணக்கார கும்பலில் நானும் எனது நண்பனும் கேட்ப்பாரற்று நின்று கொண்டிருக்கையில் ஒரு விசித்திரமான காட்சியைக் காண நேர்ந்தது. அந்தக் காட்சி இன்று வரையிலும் என் நினைவில் பசுமையாக நினைவிருக்கிறது.

அங்கே இரண்டு ஜீவராசிகளும் இன்ன பிற ஜீவராசிகளும் இருந்தன. அதில் ஒரு ஜீவராசி நிமிர்ந்த நன் நடை கொண்டிருந்தார். மற்றொரு ஜீவராசி கேள்விக்குறி போல வளைந்து நின்று கொண்டிருந்தது. இவர்களைத் தவிர மற்ற சிலரும் கேள்விக்குறி போல இல்லையென்றாலும் அதற்கு இணையாக குணிய முயற்சி செய்துகொண்டிருந்தனர். அந்த கும்பல் எங்களைக் கடக்கும் பொழுது, நாங்க பாட்டுக்கு செவனேன்னு மரத்து அடியில நின்னுட்டு இருக்கோம், ஒரு அல்லக்கை என்னைப் பார்த்து தள்ளு தள்ளுன்னுச்சு. ஏய் இருப்பா என்ன விசயம்னு கேக்கும் போது தான் தெரிந்தது அந்த நிமிர்ந்த நன்னடை சுப்ரீம் கோர்ட் ஜட்ஜாம்; அப்ப அந்தக் கேள்விக்குறி யாருன்னு கேட்டப்போ அவர் ஏதோ பெரிய லாயரோ என்னவோ என்று சொன்னது அந்த அல்லக்கை. இதற்குப்பெயர் தான் அதிகாரத்துவம் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை.

அவரது வீட்டிலும் எல்லோரும் அவரிடம் கேள்விக்குறி போல வளைந்து கொண்டு வாழ்வார்களோ?ஐயோ பாவம்.

***

இதே போலத்தான் சாமியார்களும் அவர்கள் முன்னால் (சாஷ்டாங்கமாக) விழுந்து வணங்கும் சில மக்களும்.

***

டிசம்பர் 20 2005இல் ஜான் ஜோன்ஸ் II என்கிற Harrisburg, Pennsylvaniaவைச் சேர்ந்த ஜட்ஜ், Kitz-miller et al vs Dover Area School District et al என்கிற வழக்கில் மிக முக்கியமானதொரு தீர்ப்பைச் சொன்னார். வழக்கு எதைப்பற்றியது என்றால்: அமெரிக்க மாணவர்கள் பரிணாம வளர்ச்சியைப்பற்றி எப்படி படிக்கப்போகிறார்கள் என்பதைப் பற்றியது.

வழக்கு என்ன;முழு வழக்கைப் பற்றி இங்கே பார்க்கலாம். அதன் சாராம்சம் இங்கே:

டாரிவினின் பரிணாம வளர்ச்சித் தத்துவம் இன்னும் முழுமையாக உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை. அது வெறும் தத்துவம் தான் அதை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை (பொய்!). Intelligent design என்பது டார்வீனியத் தத்துவத்துக்கு நேர்மாறானது. அது என்னவென்றால் மனிதனை கடவுள் தான் உருவாக்கினார் என்பது. மனிதனை மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளையும் கடவுள் தான் உருவாக்கினார் என்பதை விளக்கும் Of Pandas and People என்கிற புத்தகத்தை மாணவர்கள் படிக்கும் படி அறிவுறுத்துகிறோம். எல்லாத் தத்துவங்களையும் திறந்த அறிவோடு எதிற்கொள்வதைப் போல இதையும் மாணவர்கள் எதிர்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இதை அறிவியல் சொல்லிக்கொடுக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது ஒன்பதாவது வகுப்பு மாணவர்களுக்கு பாடத்துக்கு முன் வாசித்துக்காட்டவேண்டும் என்று டோவர் ஹை ஸ்கூல் ஒரு சட்டம் பிறப்பித்தது. ஒன்பது ஸ்கூல் போர்ட் மெம்பர்களில் இரண்டு பேர் ரிசைன் செய்து விட்டனர். பல ஆசிரியர்கள் இதை வாசிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். வழக்கு செப்டம்பர் 26 2005 அன்று ஆரம்பித்தது.

க்ரிஸ்த்மஸ¤க்கு ஐந்து நாளைக்கு முன்னர் நீதிமதி அந்த தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பு பரிணாமவளர்ச்சிக்குச் சாதகமாக இருந்தது. தீர்ப்பு பரிணாமவளர்ச்சிக்கு சாதகமாக இருந்தாலும் இப்படி ஒரு வழக்கு நடந்ததே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் இந்த நூற்றாண்டில். பரிணாம வளர்ச்சியை நம்பாமல் ஒரு intelligent designer (கடவுள்) தான் மக்களை உருவாக்கினார் என்று நம்புபவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் இந்த உலகத்தில். ஏதோ ஒன்றை நம்புவதற்கு எங்கோ ஒரு கும்பல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதைப் பற்றிய டாக்குமென்டரியை இங்கே பார்க்கலாம்.


இன்னும் உலகம் தட்டை தான் என்று நம்பும் கும்பல் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். World is flat என்றொரு புத்தகத்தை Thomas L Friedman எழுதினாரே; அதைப் பற்றி நான் சொல்லவில்லை. உண்மையிலே உலகம் உருண்டையாக இல்லை தட்டையாகத் தான் இருக்கிறது என்று சத்தியமடித்துச் சொல்கிறார்கள். World is weird.

உங்கள் நம்பிக்கை உங்களோடு; அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால் அந்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு சும்மா வீட்டில் உட்காராமல், அறிவியலின் வளர்ச்சிக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஏன் முட்டுக்கட்டைப் போடுகிறீர்கள்?

காமெடியன் Dave Allenஇன் இந்த வீடியோவைப் பாருங்கள். கண்டிப்பாகப் பாருங்கள். என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

***

இது போன்ற ஒரு விசயத்தை விஜய் டீவியில் "நடந்தது என்ன"வில் பார்த்தேன். ஏதோ ஒரு சாமியாரைப் பற்றி நம்ம நீயா நானா கோபிநாத் பேசிக்கொண்டிருந்தார். அந்தச் சாமியார் நூற்றியிருபது வயது வரை மனிதன் வாழ்வது எப்படி என்று பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அதோட நில்லாமல் ஆன்மா மறுபிறவி என்று ஏகத்துக்கும் உளறினார். நாம் செய்த பாவங்கள் எல்லாம் நாம் சாவைச் சந்திக்கும் பொழுது நம்மை சித்ரவதை செய்யும் என்றார். அவரைச் சந்திக்க சென்றவர்: அப்ப பிறந்த உடனே இறக்கும் குழந்தைகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்; அவர்கள் தான் பாவமே செய்யவில்லையே என்றார். அதற்கு முன்பிறவியில் செய்த பாவங்கள் இருக்கிறது இல்ல? என்றார். புல்ஷிட்.

இது போன்ற சாமியார்களின் அசட்டுத்தனமான பேட்டிகளை விஜய் டீவி ஒளிபரப்பாமல் இருப்பது நல்லது.

***

ஸோ சீரியஸ் டுடே!? இணையத்தில் எங்கோ படித்தது.
உலகம் flatன்னு எப்படி நம்பறீங்க? அதான் ப்ளாட் ப்ளாட்டா ப்ளாட்டு போட்டு விக்கறோம்ல!

***




Digg Technorati Delicious StumbleUpon Reddit BlinkList Furl Mixx Facebook Google Bookmark Yahoo

Sunday, November 08, 2009

லாரி விபத்து (சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009)


குர‌ல்வ‌லை

(சற்றே பெரிய கதை)

முதல் நாள் என்பதால் அதிக வேலை இல்லை என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் நான் வேலை பார்க்கும் கம்பெனி ஒரு ட்ரெயினிங்குக்காக என்னை சென்னை அனுப்பியிருக்கிறது. நான்கு வாரங்கள் வரை நான் இங்கு தங்கியிருந்து எனது கம்பெனியின் ஹெச் ஆர் மென்பொருளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதிக வேலை இருக்காது என்று தான் சொல்லி அனுப்பினர்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வேலைக்கு சென்ற நான் இன்று அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு அதே வேலை விசயமாக வந்திருப்பதை நினைக்கும் பொழுது கொஞ்சம் வியர்டாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் தான் முதலில் வேலை பார்த்தேன் என்றாலும் நான் அமெரிக்கா சென்று கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஓடோடி விட்டது; இப்பொழுது இங்கே எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. சூழல் மாறிப்போய் இருக்கிறது. அலுவலகத்துக்குள் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் அதிக வித்தியாசமில்லை. சொல்லப்போனால் சென்னை அலுவலகம் கலர்புல்லாக இருக்கிறது; இ·ப் யூ நோ வாட் ஐ மீன் ;).

என் சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் தான். அங்கு தான் அம்மா அப்பா எல்லோரும் இருக்கிறார்கள். முதலில் வந்து சென்னயில் ஒரு வாரம் இருந்துவிட்டு பிறகு வார இறுதியில் தஞ்சாவூர் செல்லலாம் என்று திட்டம். யாரிடமும் சொல்லவில்லை. சர்ப்ரைஸ் விசிட்டாக இருக்கட்டும் என்று நினைத்துவைத்திருக்கிறேன். திடீரென்று அம்மாவின் முன்னால் சென்று நின்றாள் அவர்களுக்கு தலைகால் புரியாது.

***

அலுவலகம் எனக்கு நான்கு மணிக்கே முடிந்துவிடும். என் நண்பர்கள் வெகு சிலரே இன்னமும் சென்னையில் இருக்கிறார்கள். மதன் அதிலொருத்தன். படிக்கிற காலத்திலே இந்தியப் பொருட்கள் தான் உபயோகிப்பேன் என்று அடம்பிடிப்பான். ஆனால் வேளை மட்டும் அமெரிக்க மல்டி நேஷனல் கம்பெனியில் பார்க்கிறான். இப்பொழுதும் அதே கம்பெனியில் தான் இருக்கிறான். ப்ளாக் கூட வெச்சிருக்கிறான். அந்தக்காலத்திலே ஜிஆர்ஈக்குப் படித்ததால் அங்கிலம் நன்றாக வரும் அவனுக்கு. இன்று அவன் வீட்டுக்குப் போகிறேன். அவன் வீட்டில் தான் சாப்பாடு. உறக்கம் எல்லாம். வேறு இடத்தில் தங்குவதா மூச் என்று சொல்லிவிட்டான். பாசக்காரப்பயபுள்ளைக.

***

சப்பாத்தியும் கோழிக்குருமாவும் நன்றாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு மொட்டைமாடியில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். குளிர்ந்த காற்று. அழகான கொசுக்கடி. ரம்மியமாக இருந்தது. கொசுக்கடி எப்படிய்யா ரம்மியமாக இருக்கமுடியும்? இருக்கிறதே. மதனின் மனைவி மற்றும் குழந்தை கீழிறங்கி சென்று விட்டவுடன் நானும் அவனும் காலேஜ் கதைகளை கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு பேசிக்கொண்டிருக்கும் போதே தூங்கிவிட்டேன் என்று மறுநாள் காலை சொன்னான் மதன்.

***

மறுநாள் காலை வேறொன்றும் சொன்னான் மதன். நான் தூக்கத்தில் படு பயங்கரமாக அலறினேனாம். ஏன் கத்தினேன் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. முயன்று பார்த்தேன். முடியவில்லை.

***

எனது ஹெச் ஆர் மிஸ்.ரம்பா அலுவலகத்தின் மொத்த விதிகளையும் ஒரு மணி நேரத்தில் அடக்கிவிட முயன்று கொண்டிருந்தார். நான் இந்தியாவில் இருக்கும் வரையிலும் அவர் தான் ச்சீப். மேற்பார்வையாளர். ஷீ லுக்ஸ் குட்.

மதிய உணவு நேரத்தில் கேன்டீனில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது தஞ்சாவூருக்கு சும்மா ரிங் செய்தேன். லைன் டெட்டாக இருந்தது. யாரும் போன் எடுத்தாலும் பேசாமல் வைத்துவிட வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இப்பொழுது பேசவேண்டும் போல இருந்தது. யாராவது எடுத்தால் தேவலாம் போல இருந்தது. என் அப்பாவின் செல்போனுக்கு அடித்தேன். ரிங்.ரிங்.ரிங். கட் செய்து விட்டேன்.

***

அன்றைய இரவு பூரிக்கிழங்கை ஒரு கை பார்த்துவிட்டு மீண்டும் மொட்டைமாடியில் தூங்கப்போகும் பொழுது பேசிக்கொண்டிருக்கும் பொழுதே தூங்கிவிடுவேனோ என்னவோ என்று மதன் தூங்குவதற்கு முன்னரே, டேய் கிருஷ்ணா, உன் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு தூங்குடா, இன்னைக்கும் கத்தித்தொலைக்காதே என்றான். நான் என்ன வேணுமின்னா கத்தறேன்.

***

ஹீரோ ஹோண்டா புதிதாக வாங்கியிருக்கிறேன். பிள்ளையார் கோவிலுக்கு எடுத்து சென்று வழிபாடு முடித்துவிட்டு என் பையனை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வரவேண்டும். காற்றில் எனது முடி அழகாக அசைந்தது. என்னை ரியர் வியூ மிரரில் பார்த்துக்கொண்டேன். அப்பா புது பைக் எப்பப்பா வரும் என்று பையன் நச்சரித்துக்கொண்டேயிருந்தான். பார்த்தால் சந்தோஷப்படுவான். பள்ளிக்கூடத்தை நெருங்கிவிட்டேன். லாரி ஒன்று அதிவேகமாக வருகிறது. நல்லவேளை முன்னாலேயே பார்த்துவிட்டேன். கீழிறங்குவதற்கு இடமிருக்கிறது. ரோட்டைவிட்டுக்கீழிறக்கினேன். அடப்பாவிகளா இப்படி மணலா இருக்கு. வண்டி தடுமாறுகிறது. என்னால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. அப்பா என்றொரு சத்தம். வண்டி கீழே விழுகிறது. சரியாக என் தலைக்கு கொஞ்சமுன்னால் லாரியின் கருப்பான பெரிய டயர்.

சட்டென்று முழித்துக்கொண்டேன். வாட் த ஹெல். அமெரிக்காவில் இருக்கும் எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கால் செய்தேன். எனக்கு ஒரு மகள் ஒரு மகன். எவ்ரி ஒன் வாஸ் ஓக்கே. மனைவி முதலில் பயந்து விட்டாள். என்ன இந்த நேரத்தில கால் பண்றீங்கன்னு கேட்டுக்கொண்டேயிருந்தாள். நான் சொல்லவில்லை.

***
சும்மா ஏதாவது கனவாக இருக்கும்டா என்றான் மதன். ஆனால் நிஜம் போல அல்லவா இருந்தது. ஐ பெ·ல்ட் இட் வாஸ் ரியல். எனக்கு அந்த இடம் எல்லாம் நன்றாகத் தெரியும். என்ன இடம் என்றான் மதன். எனக்குத் தெரியவில்லை. அந்த அழகான ஆலமரம். பிள்ளையார் கோவில். போலீஸ் ஸ்டேஷன். குறுகலான ரோடு. பேக்கரிக் கடை. தேவர் சிலை. ஐ நோ தட் ப்ளேஸ் வெரி வெல்.உன்னோட ஊரா இருக்கும் டா. நோ. என்னொட ஊரில் இது போல ஏதும் கிடையாது. பிள்ளையார் கோவிலும் ஆலமரமும் இல்லாத ஊராடா, நல்லா யோசிச்சுப் பாரு. பத்து வருடத்தில மறந்திருப்ப. நோ நெவர். பிள்ளையார் கோவில் போலீஸ் ஸ்டேஷன் தேவர் சிலை பேக்கரிக் கடை ஒரே ரோட்டில் எங்கள் ஊரில் இல்லை. சொல்லப்போனால் தேவர் சிலையே எங்கள் ஊரில் இல்லை. டேய் என்ன மறுஜென்மக்கதை விடறியா? என்றான் மதன். ஐ டோன்ட் நோ. மைட் பி?

***

எவ்வளவு முயற்சி செய்தும் எனக்கு வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை. கொஞ்சம் பயமாக இருந்தது. கொஞ்சம் த்ரில்லாகவும் இருந்தது. MAN DIED IN LORRY CRASH HERO HONDA SCHOOL என்று ஹ¥கிள் செய்தேன். எதுவும் தேரவில்லை. மிஸ் ரம்பா இன்றும் செமினார் எடுத்தார். இட் வாஸ் இன்ட்ரஸ்டிங்.

இன்றும் அந்தக் கனவு வரும் என்று காத்திருந்தேன். மதனும் கூட எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏன் நீங்களும் எதிர்பார்த்திருப்பீர்கள். ஆனால் கனவே வரவில்லை. தூங்கினால் தானே கனவு வரும்? கெட்ட கெட்ட கனவா வருதுன்னு மதன் மொட்டைமாடிக்கு போகவேண்டாம் என்று சொல்லிவிட்டான். பத்து வருடங்களாக மொட்டைமாடியில் படுத்துப் பழக்கமில்லாமல் மொட்டை மாடியில் படுத்து ஆனந்தமாகத் தூங்கும் பழக்கத்தை உன் ஜீன் இழந்துவிட்டது என்றான். அமேசிங் தாட்.

தூக்கம் பிடிக்காமல் காலை ஐந்து மூன்றுக்கு எழுந்தேன். ஐ கேனாட் ஹெல்ப் பட் தாட்ஸ் வாட் மை டிஜிட்டல் வாட்ச் சொன்னது. இந்த முறை தமிழில் டைப் செய்தேன். "மணலில் சருக்கி லாரியில் அடிபட்டு பள்ளிக்கூட வாசலில்" என்று டைப் செய்தேன். ஹோலி ஷிட்!

***
அனுபவம் என்கிற கட்டுரையில் குரல்வலை என்கிற ப்ளாக்கில் MSV Muthu என்கிற ப்ளாக்கர் இவ்வாறு எழுதியிருக்கிறார்:

அனுபவம் -10
ஒரு சோக நிகழ்ச்சி.

அன்று நான் என் நண்பன் சூர்யாவும் அந்தச் சிறுவனுடன் பள்ளிக்கூடத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தோம்.அவனுடைய அப்பா வரும் நேரம் வந்துவிட்டது. எங்களுக்கு ஸ்டடி பெல் இன்னும் கொஞ்ச நேரத்தில் அடித்துவிடும். அந்தச் சிறுவனுக்கு சாக்லேட் வாங்குவதற்கு நான் திரும்புகையில் அந்தச் சிறுவன் அப்பா என்று கத்தினான். ஒரு லாரி தூரத்தில் கிரீச்சிட்டு நின்றது. என் பார்வைக்கு ஏதும் தெரியவில்லை. சூர்யா ஐயோ ஐயோ என்று கத்திக்கொண்டே லாரியை நோக்கி ஓடினான்.
...
அந்த சிறுவனின் கதறல் எனக்கு இன்று வரையில் என் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.
...
***

உடனே முத்துவுக்கு ஒரு மின்னஞ்சல் தட்டிவிட்டேன். என் ஹாட்மெயில் பாக்ஸை ரெ·ப்ரெஷ் செய்து கொண்டேயிருந்தேன். ஏதோ முத்து இப்பொழுதே ரிப்ளை செய்துவிடுவதைப்போல. நோ மெயில்ஸ்.

வீடே நிசப்தமாக இருந்தது. சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தின் டிக் டிக் டிக் சத்தத்தைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. எழுந்து சென்று ப்ரிட்ஜில் தண்ணீர் எடுத்துக் குடித்தேன். என் செல் போன் ரிங் செய்தது. இந்த நேரத்தில் யார் என்று பார்த்தேன். முத்து.

***

முத்துவுக்கு ஆச்சரியமான ஆச்சரியம் உங்களுக்கு எப்படி இந்தக்கனவு வந்தது என்று கேட்டுக்கொண்டேயிருந்தார். என்னவெச்சு காமெடி கீமடி பண்ணலியே என்றார் சிரித்துக்கொண்டே. நல்லா காமெடியா பேசுவார் போல. சட்டென்று ரைமிங்காக எப்படி பேசமுடிகிறது? என்னவெச்சு காமெடி கீமடி பண்ணலையே! நல்லாயிருக்குல்ல? இல்ல. உண்மையிலேதான் சொல்றேன் என்று சத்தியம் வைத்தேன்.

அவர் சிங்கப்பூரில் இருக்கிறாராம். அவர் அவருடைய ப்ளாகில் எழுதிய சம்பவம் அவர் பத்தாவது படிக்கும் பொழுது நடந்ததாம். திருமங்கலத்தில் நடந்திருக்கிறதாம். நான் எந்த ரோடு என்று கேட்டபொழுது உசிலம்பட்டி ரோடு என்றார். அங்கே தேவர் சிலை இருக்கிறதா என்று கேட்டேன். ஓ இருக்கிறதே. பிள்ளையார் கோவில். ஆமாம் இருக்கிறது. ஒரு பேக்கரிக்கடை? ஆமாம் வீ பி மதுரா பேக்கரி இருந்தது. இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை என்றார். ஆமாம நீங்கள் எந்த வருடத்தில் பத்தாவது படித்தீர்கள் என்று கேட்டபொழுது நிறைய யோசித்துப் பிறகு 1995 என்றார்.

***

1995. திருமங்கலம்.
·ப்யூச்சர் சாப்ட்.

போனவருடம் நீங்க நல்லா பெர்பார்ம் பண்ணினதுக்காக உங்களுக்கு சீனியர் அனலிஸ்ட் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது சிவா. ஆர் யூ ஹேப்பி வித் திஸ்? யெஸ் மிஸ்டர் கௌதம். அதுமட்டுமில்ல உங்களுக்கான போனஸ் இந்தக் கவரில இருக்கு. தாங்க்யூ கௌதம். ஒன் மோர் க்வஸ்டீன் சிவா. யெஸ் சொல்லுங்க கௌதம். உங்களுக்கே தெரியும் நாம சின்ன கம்பெனியா இருந்தாலும் நம்முடைய ப்ராடக்ட் ரொம்ப நல்லாயிருக்கிறதால இப்போ கொஞ்ச நாளா வெளிநாடுகளில் பிரபலம் ஆகிட்டு வருது. இப்போ அமெரிக்காவில இத இன்ஸ்டால் செய்யனும் கூட இருந்து ஆறு மாதம் கவனிக்கனும்னு இது வரை ரெண்டு கம்பெனிகள் கேட்டிருக்கு. சட்டுன்னு எனக்கு உங்க ஞாபகம் தான் வந்தது. ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சுல்ல? ஒரு பையன் கூட இருக்கான்ல? யெஸ் கௌதம். இட்ஸ் ஓகே. ஐ வில் மானேஜ்.சோ நீங்க அமெரிக்க போறதுக்கு ரெடியாயிட்டீங்கன்னு சொல்லுங்க! ஆமா கௌதம். இது நல்ல ஆப்பர்சூனிட்டி இல்லியா? பிஎஸ்ஸி பிஸிக்ஸ் மட்டும் படிச்ச எனக்கு இது மாதிரியெல்லாம் சந்தர்ப்பம் நிறைய கிடைக்காது கௌதம்.

ஓக்கே சிவா. குட். இந்த விசயத்தை கன்பார்ம் ஆகிற வரைக்கும் யாரிடமும் சொல்லாதீங்க. ஓக்கே கௌதம். உங்க மனைவி கிட்ட கூட. ஓக்கே கௌதம்.

***

எந்த வருஷம் சார்?1995ப்பா. எனன சார் பதினாலு வருஷத்துக்கு முந்தி ஆக்ஸிடென்ட்ல போயிட்ட ஒருத்தன இப்ப வந்து தேடுற. எனக்கு ரொம்ப வேண்டியவர்ப்பா. கொஞ்சம் பாத்துச்சொல்லு. ரொம்ப வேண்டியவருன்னு சொல்ற பேரு என்னன்னு தெரியலன்ற?என்னமோ போ..உள்ள நிறைய பேரு இருக்காங்க..எல்லோருக்கும்..மூன்று ஐநூறு ரூபாய் நோட்டுகளை அவன் கைகளில் வைத்தேன்.சரி சார். நீ போய் டீ குடிச்சிட்டு அங்க நில்லு நான் விசயத்தோட வர்றேன்.

***

பேரு சிவா. அவன் அப்பா பெயர் தங்கவேலு. மனைவியின் பெயர் இந்திரா. மகனின் பெயர் இல்லை. இறந்த பொழுது அவனுடைய முகவரி: 78 பெரிய கடை வீதி என்று இருந்தது. எங்கே வேலை பார்த்தான் என்கிற விசயம் இல்லை. வேறு எந்தத் தகவலும் இல்லை.

ஆபீஸில் சொல்லாமல் லீவு போட்டுவிட்டேன். மிஸ் ரம்பா என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்தார். நான் ஆன்ஸர் பண்ணவில்லை.

***

கிருஷ்ணன்?
மதனா..ஆமாடா..நான் தான் பேசறேன்..
யாரோ முத்துங்கறவரு வீட்டு நம்பருக்கு கால் பண்ணியிருந்தார்..உன்னத்தான் கேட்டார்..
அப்படியா? எதும் தகவல் சொன்னாரா?
இல்ல என்ன நிலைமைன்னு கேட்டார்..
ஓ..ஒன்னும் தேரலைன்னு சொல்லு..
ஏன்டா உனக்கு இந்த வீண் வம்பு? பேசாம வந்த வேலையப் பாக்க வேண்டியதுதான?
அதத்தான்டா பாத்திட்டிருக்கேன்..

***

78 பெரிய கடை வீதியைத் தேடிப்பிடிப்பது அவ்வளவு கஷ்டமாக இல்லை. எனக்கு அந்த இடம் ஏதும் நினைவில் இல்லை. இந்த இடத்துக்கு வந்தால் எல்லாமே ஞாபகத்துக்கு வந்துவிடும் என்று நினைத்தேன். சுத்தம்.

அது இரு இரண்டு மாடிக்கட்டிடம். வெளியே கம்பிகேட் போட்டிருந்தது. ஒரு நாய் வெளியே படுத்திருந்தது. தெரு நாய். என்னைப் பார்த்தும் எழுந்துகொள்ளாமல் அப்படியே இருந்தது. நான் வந்ததும் அங்கே இருக்கிற யாராவது என்னை அடையாளம் கண்டுகொண்டுவிடுவார்கள் என்று நினைத்தேன். நோப்.

காலிங் பெல் இருந்தது. கொஞ்சம் யோசித்துவிட்டு அழுத்திக் காத்திருந்தேன். இதயம் அதி வேகமாகத் துடித்தது. என் இதயத்துடிப்பின் ஓசை படுத்திருந்த அந்த நாய்க்குக் கேட்டிருக்க வேண்டும். எழுந்து நின்று கவனமாக என்னைப் பார்த்தது. கொஞ்சம் நடுத்தர வயதுள்ள பெண் ஒருவர் வந்தார். யார் வேணும் என்றார்? எனக்கும் அவரைத் தெரிந்திருக்கவில்லை. உங்க பெயர் இந்திராவா?

***

ஏன் கேக்கறீங்க? இல்லை. உங்க பெயர் என்ன? மேனகா. உங்களுக்கு என்ன வேணும் சார்? நீங்க யார்? நான்.. நான்... சிவான்னு யாராவது உங்களுக்குத் தெரியுமா? சிவா? அப்படி யாரையும் தெரியாதே. உங்க கணவர்? வேலைக்குப் போயிருக்கார். உங்களுக்கு என்ன சார் வேணும்? உங்களுக்கு இந்திரான்னு வேற பெயர் ஏதும் இருக்கா? இல்ல சார். நீங்க தவரான இடத்துக்கு வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். உங்களுக்கு என்ன அட்ரஸ் வேணும். நம்பர் 78 பெரிய கடை வீதி. இதுதான். ஆனா நீங்க கேக்குற மாதிரி யாரும் இங்க இல்ல சார். பக்கத்தில விசாரிச்சுப் பாருங்க.

மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. பத்து வருடங்கள் ஆச்சு. எது வேணும்னாலும் மாறி இருக்கலாம். அவங்க இப்ப எங்க இருக்காங்களோ? எனக்கும் அவங்களுக்கும் முதலில் ஏதும் சம்பந்தம் இருக்குமா? அந்தப் பையன் என்ன செய்துகொண்டிருப்பான்? இனி நான் என்ன செய்யப்போகிறேன்?

***
உசிலம்பட்டி ரோடு தூசியாக இருந்தது. தேவர் கூண்டுக்குள் அடைந்துகொண்டிருந்தார். போலீஸ் ஸ்டேஷன் இருந்தது. பள்ளிக்கூடம் தொலைவில் தெரிந்தது. பள்ளிக்கூடத்தில் போய் கேட்டுப்பார்த்தேன். முத்து என்பவரையே தெரியாது என்று சொல்லிவிட்டனர். 1995இல் மூன்றாம் வகுப்பு படித்த அந்தப் பையனைப் பற்றி என்ன கேட்பது? பெயர் தெரியவில்லையே. சின்னாவோ என்னவோ. முழுப்பெயரும் தெரியவில்லை. அவர்களிடம் என்னவென்று கேட்ப்பது? பிரின்ஸிப்பால் முதற்கொண்டு பலரும் மாறியிருந்தனர்.

1995இல் இங்கு பிரின்ஸிப்பாலாக வேலைப்பார்த்தவர் இப்பொழுது கவர்மென்ட் பள்ளிக்கூடத்தில் பிடி மாஸ்டராக வேலை செய்கிறார். பக்கத்தில் தான் குடியிருக்கிறார். வேண்டுமென்றால் அவரைக் கேட்டுப்பாருங்கள் என்றார் ஆயா. நீங்கள் சொல்லுவது போன்ற சம்பவம் நடந்திருந்தால் அவர் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார். முத்துவை எனக்குத் தெரியும் என்றார் அந்த ஆயா.

பழைய பிரின்ஸிப்பாலின் முகவரி வாங்கிக்கொண்டேன்.

***
உசிலம்பட்டி ரோட்டில் மீண்டும் நடந்து கொண்டிருந்தேன். பேக்கரி பற்றிய ஞாபகம் அப்பொழுது தான் வந்தது. அதே வீ பி மதுரா பேக்கரி அங்கிருந்தது. ஒரு காப்பியும் ஹனி கேக்கும் ஆர்டர் செய்துவிட்டு அங்கு உட்கார்ந்தேன். பல கோணத்தில் யோசிக்க முயன்றேன். இந்தியா வந்து இரண்டு வாரங்கள் ஆச்சு.
கிட்டத்தட்ட ஒரு வாரமாக தேடியும் ஏதும் சிக்கவில்லை. வீட்டிலிருந்து ஒரு காலும் இல்லை. மனைவிக்கும் நான் கால் செய்யவில்லை. அவளும் என்னை அழைக்கவில்லை. அப்பொழுதுதான் எனக்குத் தோன்றியது. என் செல்போனை மிஸ் ரம்பாவுக்குப் பயந்து சுவிட்ச் ஆ·ப் செய்திருக்கிறேன். இருக்கட்டும். இன்று இரவு மனைவிக்கு கால் செய்யலாம். இன்றுடன் தேடுதல் வேட்டையை முடித்துக்கொள்ளலாம்.

இன்று இரவு தஞ்சாவூர் போய்விட்டு அப்பா அம்மாவைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் சென்னை போய்விடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

***

நீங்க இங்க ரொம்ப நாளா கடை வெச்சிருக்கீங்களா? ஆமா. எங்கப்பா ஆரம்பிச்ச கடை. அவர் தவறிட்டார். இப்போ நான் பாத்துக்கிட்டு இருக்கேன். நீங்க எவ்ளோ நாளா கடையப் பாத்துக்கறீங்க? பதினைந்து வருஷமா நான் தான் பாத்துக்கறேன். என்னை வித்தியாசமாக அவர் பார்க்க ஆரம்பிப்பதற்குள் அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டேன்: 1995ல உங்க கடைக்கு முன்னால ஒரு விபத்து நடந்து பைக்ல வந்த ஒருத்தர் அந்த இடத்திலேயே பலி ஆயிட்டாரு. அதப்பத்தி உங்களுக்குத் தெரியுமா? தெரியலையே சார். இந்த ரோட்ல ஆக்ஸிடென்ட்டுக்கா பஞ்சம். பிள்ளையார் கோயில் இருக்கு பாரு, நேத்து கூட அந்தத் திருப்பத்தில ஒரு ஆக்ஸிடென்ட் நடந்துச்சு.இறந்தவன் என் நண்பர் ஒருவருக்கு சொந்தம். 26 வயசுப் பையன். புதுசா கல்யாணம் பண்ணவன். புது பைக். பாவம். இன்னும் கொஞ்ச ஒரு மாசத்திலேயோ என்னவோ அவன் அமெரிக்க போகப்போறதா சொல்லிட்டிருந்தானாம். அமெரிக்காவுக்கா எதுக்கு? படிக்கவா? ஏதோ வேலை விசயமாவாம்? வேலை விசயமா? அவ்வளவு தான் எனக்குத் தெரியும்..

***

மீண்டும் கார்பரேஷனுக்கு விரைந்தேன். இந்த முறை ப்யூனுக்கு மூவாயிரம் கொடுக்க வேண்டியிருந்தது.

இறந்தவரின் பெயர்: மணிகண்டன். அப்பா பெயர்: மணிமாறன். வயது: 27 ·ப்யூச்சர் சா·ப்ட் என்கிற கம்பெனியில் வேலை பார்த்தவராம்.
இந்த சின்ன ஊரில் சாப்ட்வேர் கம்பெனி இருக்கிறதா?

***

எம்டியப் பாக்கணும். நீங்க யாரு? என்ன விசயமா வந்திருக்கீங்க? உங்க எம்டி கிட்ட பேசிட்டேன். இன்னைக்கு காலையில பத்து மணிக்கு வரச்சொன்னார். ஓ அப்படியா உக்காருங்க. வந்திடுவார்.

*

ஸோ.. மிஸ்டர்..கண்ணன்..யெஸ் யெஸ் மிஸ்டர் கண்ணன்..நீங்க திருமங்கலத்திலேயே தங்குறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க? ஆமா மிஸ்டர் கௌதம். என்னுடைய பேரன்ட்ஸ் எல்லாம் இங்கதான் இருக்காங்க. கடைசிக்காலத்தில அவங்களக் கூட இருந்து பாத்துக்கனும்னு தோணுச்சு அதான் இங்கயே கொஞ்ச நாளைக்கு இருக்கலாம்னு நினைக்கிறேன். வெல்...எங்க டெக்னிக்கல் மானேஜர் லீவுல இருக்கார்..உங்க மாதிரியான டாலன்ட்ஸை விடவும் மனசில்ல..ஐ வில் கால் யூ பேக் இன் டூ டேஸ்..

*

கௌதம் தனது பர்ஸனல் லேப்டாப்பை திறந்து HR என்கிற அந்த மென்பொருளை திறந்தார். மிக நீளமான ஒரு பாஸ்வேர்டை அடித்தார். நீண்ட நேரம் காத்திருந்தார்.
BODY SHOP மெனுவை க்ளிக் செய்து வெகு நேரம் காத்திருந்தார். இரண்டு இரண்டு புகைப்படங்கள் வரிசையாகத் தோன்றின. ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கீழே படத்தில் தோன்றியவரின் பெயர் மற்றும் வருடம், பக்கத்திலே வேறு ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ; பெயர் இல்லை வருடமும் இல்லை. நிறைய போட்டோக்களைப் பார்த்துக்கொண்டு வந்தவர் ஒரு போட்டோவில் அப்படியே எழுந்து நின்று விட்டார். அந்த போட்டோவில் இருந்த நபருக்குக் கீழே சிவா என்று இருந்தது; வருடம் 1995; பக்கத்தில் தற்பொழுது கண்ணன் என்று தன்னைப் பார்க்க வந்த நபரின் போட்டோ.

Authenticating the caller..
2134A897Z0000011100000N....I9988653.
டயல் டோன்...
Authenticating the receiver..
6734561238965367429076452Y35...TY..
பீப் பீப் பீப் பீப் பீப் பீப் பீப்..
RAT ESCAPED. POSSIBLE BREACH.
பீப்..பீப்..பீப்..பீப்..பீப்..
COPIED. CONTROL INIT.

கௌதமின் முகம் கலவரத்தில் வெளுத்திருந்தது. இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார்.

***

அறையில் படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் கனவில் தோன்றியவரின் மகனும் மனைவியும் எங்கே போயிருப்பார்கள்? எந்த லிங்க்கும் எனக்குப் புலப்படவில்லையே. நாளைக்கு ஊருக்குக் கிளம்பவேண்டும். இதுவரை வீட்டுக்கும் கால் செய்யவில்லை. என் மனம் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. இதெல்லாம் வெறும் கனவாக இருக்குமோ? ஜஸ்ட் கோயின்ஸிடன்ஸ்? நான் தான் எல்லாவற்றையும் சீரியஸாக எடுத்துக்கொண்டேனோ? பேசாம வேலையப் பாத்துக்கிட்டு ஊருக்கு கிளம்பிடலாமா?மீண்டும் சிவாவை பற்றிய குறிப்புகளை எடுத்துப் பார்த்தேன். சிவா. இந்திரா. 78 பெரிய கடை வீதி. இதில் இருக்கும் முகவரியில் அவர்கள் இல்லை. எங்காவது காலி செய்து சென்றிருக்கக்கூடும். பக்கத்தில் சிலரிடம் விசாரித்தாயிற்று. பெட்டிக்கடை வைத்திருப்பவர். துணி அயர்ன் செய்பவர். யாருக்கும் சிவாவையும் இந்திராவையும் தெரிந்திருக்கவில்லை. அந்தச் சின்னப்பையன்? பழைய ப்ரின்ஸிப்பாலிடமும் விசாரித்துவிட்டேன். நோ க்ளூஸ். 1995இல் மூன்றாவது படித்துக்கொண்டிருந்தான் என்றால் இப்பொழுது பணிரெண்டாவது படித்துக்கொண்டிருக்கவேண்டும். ஹவ் டிட் ஐ மிஸ் திஸ்?

எழுந்து ஓடினேன். கதவைக் கூடப் பூட்டவில்லை. ஹோட்டலைவிட்டு வெளியேறியதும் கண்ணில் தென்பட்ட ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தேன்.

***

நீண்ட வற்புறுத்தலுக்குப் பின் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்களை நான் ஐந்து நிமிடங்கள் மட்டும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே பையன் இன்று வரை அதே பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பானா என்பது சந்தேகம் தான் என்றாலும், ஜஸ்ட் கிவ் இட் எ ட்ரை.

கதையை முழுசாகச் சொல்லாமல் விபத்தையும் அந்தப் பையனைப்பற்றி மட்டும் சொன்னேன். மாணவர்கள் எப்பொழுதும் போல தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பேசிக்கொண்டேயிருந்தனர். பாய்ஸ் எனி க்ளூ? என்று கேட்டுப்பார்த்தேன்.

நான் கூட்டத்தை முடிக்கும் வரையிலும் எல்லோரும் தங்களுக்குள் பேசிக்கொண்டேதான் இருந்தனர். நோ க்ளூஸ்.

***

என்னா சார்? ஏதாவது க்ளூ கெடச்சதா? பள்ளியின் கேம்பஸில் இருக்கும் ஸ்டேஸனரி ஸ்டோர்ஸ் கடைக்காரர். இவரிடமும் முன்னாலே விசாரித்துப் பார்த்துவிட்டேன். பயனில்லை. என்னா மணி சார் என்ன தேடறார்? அங்கே உட்கார்ந்திருந்த ஒரு வயதானவர் கேட்டார். பதினாலு வருடத்துக்கு முன்னர் இங்க நடந்த ஒரு பைக் ஆக்ஸிடென்ட் பத்தி என்கிட்ட அன்னைக்குக் கேட்டுட்டிருந்தார். பதினாலு வருஷத்துக்கு முன்னாடியா? கொஞ்சம் விவரமா சொல்லுங்க. நான் சொல்லிமுடித்ததும் எழுந்து என் பக்கத்தில் வந்தார் அந்தப் பெரியவர்.

***

நீங்க சொல்ற அந்தப் பையன எனக்கு நல்லாத் தெரியும். அப்ப இதோ இங்க தான் கயித்துக்கடை வெச்சிருந்தேன். அவங்க அப்பா இதே ஊர்ல தான் ஏதோ கம்ப்யூட்டர் கம்பெனியில வேலை செஞ்சிட்டிருந்தார். கம்ப்யூட்டர் கம்பெனியா? ஆமா. சைக்கிள்லதான் வந்து பையனக் கூப்பிட்டுட்டு போவார். அவர் வருவதற்கு கொஞ்ச நேரம் ஆச்சுன்னா பையன் என் கடையில தான் இருப்பான். என்கிட்ட நல்லா பேசுவான் அந்தப் பையன். பள்ளிக்கூடத்தில எல்லோருக்கும் அவனப்பிடிக்கும். ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு அவங்க தாத்தா வீட்டுக்குப் போகப்போறேன்னு சொல்லிட்டிருந்தான். ஆக்ஸிடென்ட் நடந்த அன்னிக்கு முதல் நாள் அவங்க அப்பா அவனக் கூப்பிட வர்றதுக்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு. அவர் வந்தப்ப சைக்கிள்ல நிப்பாட்டிட்டு டீ சொல்லிட்டு என் கூட பேசிட்டிருந்தார். பேச்சுவாக்கில, என்ன சார், ஸ்கூலுக்கு லீவு போடப்போறேன்னு சொல்றான்னு கேட்டேன். சொல்லிட்டானா? ஒன்னுமில்ல சும்மாதான்னு சொன்னார். ஆனா அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது; அவர் வெளிநாடு போவதா அவர் மனைவி கிட்ட மட்டும் சொல்லிட்டிருந்திருக்கார். வெளிநாடா? அப்படித்தான் அவருடைய மனைவி சொன்னதா சொன்னாங்க.

இப்ப அவங்க மனைவி அந்தப்பையன் எல்லோரும் எங்கிருக்காங்கன்னு தெரியுமா?

***

யார் நீங்க? உங்களுக்கு யார் வேணும்?
நீங்க இந்திரா..
ஆமா...நான் தான்...நீங்க?
நான்..நான்..நான்..உங்க..உங்க..
அந்தப் பையன் வந்து நின்றான்..கையில் கெமிஸ்ட்ரிப் புத்தகம்..
உங்களுக்கு யார் வேணும் என்றான்..
அப்பு..அப்புக்குட்டி எப்படிடா இருக்கே?
ர்..ர்..ர்..ராணி நீ எப்படிம்மா இருக்கே?
நீ..நீ..நீ..நீ..நீங்க...கண்களிலிருந்து நீர் வழிகிறது...என்னங்க..என்னங்க..என்னங்க..ஐயோ..ஐயோ..என்னங்க..
என் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது..ராணிம்மா..நான்..நான் தான்..நான் தான்..
எனக்கு கரண்ட் ஷாக் அடிக்கிறார் போல இருக்கிறது..
பக்கத்தில் இரண்டு பேர்..இடப்பக்கமும் வலப்பக்கமும்..
ஐயோ..என்ன இது..என்ன இது...நான் எங்கு போகிறேன்..
ராணி ராணி என்னப்பிடி..என்னப்பிடி..பிடி..அப்பு..அப்புக்குட்டி..
ராணி கதவைப் பிடித்துக்கொண்டு சரிகிறாள்..
வெறுமை.வெறுமை.வெறுமை.மூச்சு விட முடியவில்லை. உடலே பாரமாக இருக்கிறது...நீண்ட பயணம்..

***

அம்மா..அம்மா..
என்னம்மா ஆச்சு? ஏன் கொய்யாப்பழம் விக்க வந்தவனப்பாத்து ஐயோ ஐயோன்னு சொல்லிட்டிருந்தீங்க..
இந்திரா அழுது கொண்டேயிருக்கிறாள்..ஏதும் பேசவில்லை..

சுவற்றில் சிவா சிரித்துக்கொண்டிருக்கிறான்.

***

ஹலோ மிஸ்டர் மதன்?
யெஸ்..
நான் முத்து பேசறேன்..
முத்து? எந்த முத்து?
குரல்வலை ப்ளாக்கர்..
குரல்வலை? யாரு சார் நீங்க?
நான் நான்..உங்கவீட்ல கிருஷ்ணன் அப்படீன்னு ஒருத்தர் தங்கியிருந்தார் இல்லியா?
கிருஷ்ணன்? யார் அது?
உங்க ப்ரண்ட்..
என் ப்ரண்டா? ராங் நம்பர்..
இல்ல..அவர் இந்த நம்பர் தான் கொடுத்தார்..
இல்லங்க..எனக்கு கிருஷ்ணன்னு யாரும் ப்ரண்ட் இல்ல..தவிரவும் யாரும் என் வீட்ல வந்து தங்கவேயில்ல..இப்ப போன வெக்கறீங்களா?

முத்து மதனின் வீட்டு நம்பருக்கு அடிக்கிறார்.
ஹலோ..
ஹலோ..
மிஸ்..மிஸ்டர்..மதன் இருக்காரா?
யெஸ் மதன் ஸ்பீக்கிங்..
நான் முத்து பேசறேன்..
ஏன் சார் சொன்னாக் கேக்கமாட்டீங்களா? என் வீட்டு நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?
சார்..நான் இந்த நம்பருக்கு ஏற்கனவே ஒரு தடவ கால் பண்ணிருக்கனே..நாம் ரெண்டு பேரும் பேசிருக்கோம்..
என்ன சார் விளையாடறீங்களா?
உங்க ப்ரண்ட் கிருஷ்ணன்..
கிருஷ்ணனையும் தெரியாது ராதாவும் தெரியாது..குழப்பாம உங்களுக்கு எந்த நம்பர் வேணுங்கிறதப்பாத்து கரெக்டா அந்த நம்பருக்கு அடிங்க..

யாருடி அது கிருஷ்ணன்? என் ப்ரண்டாம்? உனக்கு யாரையும் அப்படித் தெரியுமா? ம்ம்..இல்லியே? இது என்ன புதுக்குழப்பம்?

***

·ப்யூச்சர் சாப்ட்.

கௌதம் தன் கம்ப்யூட்டரை ஆன் செய்து மெயில் செக் செய்தார்.

HRஇடமிருந்து மெயில் வந்திருந்தது. மெயிலை டீக்ரிப்ட் செய்து படிக்க ஆரம்பித்தார்.

நடந்ததுக்கு மன்னிக்கவும். எப்பொழுதும் போலத்தான் ட்ரெயினிங்குக்கு பூலோகத்திற்கு ஒருவரை அனுப்பிவைத்தோம். நினைவுகள் எல்லாவற்றையும் சுத்தமாக அழித்தப்பிறகு தான் அனுப்பினோம். ஆனால் எப்படியோ அவருக்கு நினைவு வந்துவிட்டது. இன்னும் அதற்க்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவில்லை. அவரை மீட்டுக்கொண்டாயிற்று. பூலோகத்தில் அவர் விட்டுச்சென்ற எல்லா நினைவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு யாரையும் இங்கே அனுப்பவேண்டாம். பிறகு சந்திப்போம்.

- Heaven (and Hell) Resource Management,

***

hr>connect to earth.global.network
connected..
hr>connect to blogger.com /use adminforall
connected..
hr>login msvmuthu@gmail.com ******
authentication success..logging in..
hr>delete post http://kuralvalai.com/2008/09/blog-post11.html
deleting..successfull..
hr>connect to cache.earth.golobal.network /use adminforall
connected..
hr>clear cache ref::http://kuralvalai.com/2008/09/blog-post11.html /all
clearing cache.....

***

Update:க‌தையை எழுதின‌ப்பிற‌கு தான் ச‌ர்வேச‌ன் ந‌ட‌த்தும் ந‌ச்சுன்னு ஒரு க‌தைப் போட்டி தெரிய‌வ‌ந்த‌து. போட்டிக்கும் க‌தையை அனுப்பிவிட்டேன்!




Digg Technorati Delicious StumbleUpon Reddit BlinkList Furl Mixx Facebook Google Bookmark Yahoo

Friday, November 06, 2009

உங்களுக்கு ஒரு விளையாட்டு : Observation


குர‌ல்வ‌லை

உங்களுக்கு ஒரு பரிட்சை வைக்கிறேன். கிழே ஒரு வீடியோவுக்கான லிங்க் இருக்கிறது. அந்த வீடியோவில் நிறையப் பேர் பாஸ்கெட் பால் வைத்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். சரியாகச் சொல்லப்போனால் பாஸ்கட் பாலை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பாஸ் செய்து கொண்டிருப்பார்கள். இந்த வீடியோ மொத்தம் 25 வினாடிகள் தான் ஓடும். அதற்குள்ளாக நீங்கள் ஒரு விசயத்தைக் கவனித்து கணக்கிட வேண்டும். என்னவென்றால் எத்தனைமுறை பந்து ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பாஸ் செய்யப்பட்டது என்பது தான் அது. Just count howmany times the ball is passed. ரெடியா?இது உங்கள் கவனத்தைச் சோதிக்கும் வீடியோ. வீடியோ இங்கே இருக்கிறது.
1.2.3......25..26..27
பார்க்காமல் கீழே இருப்பதைப் படிக்காதீர்கள். ஒரு 25 வினாடி செலவிட்டால் தான் என்ன? பிஸியா? ஓகே. பிறகு எதற்கு பதிவு படிக்க வந்தீர்கள்? போங்க சார் போய் பாத்துட்டு வாங்க!
பாத்தாச்சா?

இப்பொழுது பதில் சொல்லுங்கள்:
1. மொத்தம் எத்தனை முறை பந்து பாஸ் செய்யப்பட்டது?
2. ஓகே. வீடியோவின் நடுவில் ஒரு கொரில்லா வந்ததே பார்த்தீர்களா?

பார்த்தவர்கள் நாம நெக்ஸ்ட் மீட் பண்ணலாம். பாக்காதவர்கள் மட்டும் நியாயமாக பின்னூட்டம் இடுங்கள் ப்ளீஸ்.

ஓகே இப்பொழுது விசயத்துக்கு வருவோம். illinoisஇல் வேளை பார்த்துவரும் புரபொஸர் Daniel J Simons என்பவர் கண்களின் சாட்சியை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பதை ஆராய்ச்சி செய்வதற்காக உபயோகித்த எடுத்துக்காட்டு தான் இது. இந்த விளையாட்டில் எத்தனை முறை பந்துகள் பாஸ் செய்யப்பட்டது என்பதைக் கணக்கிட வந்தவர்கள் பெரும்பாலோனோர் இளம் வயதினர் தான். அவர்கள் எல்லோரும் விளையாட்டைப் 25 வினாடிகள் பார்த்து முடித்தவுடன் அவர்களிடம் "நீங்கள் எத்தனை பேர் கொரில்லாவைப் பார்த்தீர்கள்?" என்று கேட்கப்பட்டதாம். நிறையப் பேர் கொரில்லா வந்ததை கவனித்திருக்கவில்லை என்பது தான் உண்மை. இத்தனைக்கும் இந்த 25 வினாடி விளையாட்டில் கிட்டத்தட்ட 9 வினாடிகள் (நிகிழ்ச்சி நடந்த நேரத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல்!) கொரில்லா சூட்டில் ஒருவர் வந்து நின்று என்னைப்பார் என்னைப்பார் என்று கை காட்டியும் நிறையப்பேர் பார்த்திருக்கவில்லையாம்!

இப்பொழுது வீடியோவில் பார்க்கும் பொழுது அப்பட்டமாக கொரில்லா வருவது தெரிகிறது. ஆனால் கொரில்லா வரும் என்பது எனக்கு முன்னமே தெரியும். (Richard Dawkins எழுதிய The Greatest Show On Earthஇல் இதைப் படித்துவிட்டுத் தான் இந்த வீடியோவைத் தேடிக்கண்டுபிடித்தேன்). உங்களுக்கு முன்னமே தெரியாதல்லவா?

இந்த லட்சனத்தில் இருக்கிறது கண்களின் சாட்சி. அதற்காக கண்கள் காண்பது எதையும் நம்பக்கூடாது என்பதல்ல கருத்து. வித்தியாசம் இருக்கிறது. இவன் தான் கொலை செய்தான் நான் பார்த்தேன் என்பதற்கும் ஒரு எக்ஸ் ரே ரிப்போர்டைப் பார்த்தோ அல்லது Large Hadron Colliderலிருந்து எடுக்கப்பட்ட ரிப்போர்ட்டைப் பார்த்தோ புரிந்துகொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன தானே?




Digg Technorati Delicious StumbleUpon Reddit BlinkList Furl Mixx Facebook Google Bookmark Yahoo

Monday, November 02, 2009

ப்ரான்ஸ் பயணம்-4


குர‌ல்வ‌லை

ப்ரான்ஸ் போயிட்டு வந்து ரொம்ப நாள் ஆச்சு. நிறைய மறந்து போயிருக்கும்னு நினைக்கிறேன். இந்த முறை தொடர்ச்சியாக எழுதி முடித்துவிடவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
*

சோ ஸ்டோரலரை பாரீஸ் விமான நிலையத்திலே விட்டுவிட்டு வந்தாயிற்று. பாவம் அதுக்கு என்ன தெரியும்? என்ன செய்யும் என்றெல்லாம் கவலைப் பட்டுக்கொண்டிருக்கத் தேவையில்லை, அது அது பாட்டுக்கு இருக்கும். யாரும் வந்து கலெக்ட் செய்யலன்னாலும் அது பாட்டுக்குத்தான் இருக்கும். யாரும் வேண்டுமென்றே அதை திருடிச்செல்லாதவரையிலும் அது அங்கு தான் இருக்கும். இந்த நாள் முடிவின் போதோ அல்லது அதற்கென்று அங்கிருக்கக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடியும் வரையிலும் அது அங்குதான் இருக்கும். அதற்குப்பிறகு அது எங்கு செல்லும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. என் மனைவிக்குத் தெரியவும் நியாயமில்லை. இதோ இங்கு அமர்ந்திருக்கும் இந்த மெர்க்கியூர் ஹோட்டலின் ரிஷப்ஷனிஸ்டுக்கும் தெரிந்திருக்கலாம். அவளிடம் விமானநிலைய சம்பவத்தை விவரித்தபிறகு நான் உனக்கு உதவுகிறேன் என்றாள்.

மீண்டும் விமானநிலையத்துக்கு செல்வதெல்லாம் கொஞ்சம் கஷ்டம். கிட்டத்தட்ட ஒரு வார மென்ட்டல் ஸ்ட்ரெஸ்ஸ¤க்குப் பிறகு அப்பாடா ஹோட்டலுக்கு வந்துவிட்டோம் என்று சந்தோசப்படக்கூட இல்லையே என்பது தான் என் வருத்தம். எங்கள் அறை இரண்டாவது மாடி. லக்கேஜ்ஜை நானே மேலே ஏற்றி என் ரூமுக்கு கொண்டு சென்று வைத்துவிட்டு மனைவியையும் குழந்தையையும் ரூமில் செட் பண்ணிவிட்டு ஹீட்டர் போன்ற இத்தியாதிகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று பார்த்துவிட்டு மீண்டும் கீழிறங்கி வந்து ரிஷப்ஷனிஸ்டும் நானும் விமானநிலையத்துக்கு தொடர்பு கொள்ள முயன்றோம். தொடர்பே கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் யாரும் இருக்க மாட்டார்களோ என்னவோ என்றாள் அவள்.














நாங்கள் தங்கியிருந்த Hotel Mercure


Saint Quentin க்கும் விமான நிலையத்துக்கு ரொம்ப தூரம். டாக்ஸியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். கிட்டத்தட்ட நூறு யூரோ ஆகும். மீண்டும் ஸ்ட்ரோலர் எடுக்க விமான நிலையத்துக்கு செல்லும் கணக்கை கம்பெனி ஏற்காது! என்பது யூரோ என்றால் நூற்றி அறுபது சிங்கப்பூர் டாலர். ஸ்ட்ரோலர் விலை இருநூறு டாலர் என்று பல கணக்குப் போட்டுப் பார்த்தேன். ட்ரெயின் செல்வதென்றால் பயமாக இருக்கிறது. கலைப்பாகவும் இருக்கிறது. சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டேன்.


இங்கே இருக்கும் பாரீஸ் RER மேப்பைப் பாருங்கள். இதனுடன் ஒப்பிடும் பொழுது சிங்கப்பூர் MRT ஒரு சின்ன துகள் போல இருக்கும். இதில் மஞ்சள் லைனைப் பின் தொடர்ந்தீர்கள் என்றால் அதில் கடைசி நிறுத்தமாக C7 இருக்கிறது பார்த்தீர்களா? அது தான் நாங்கள் தங்கியிருந்த Saint-Quentin-en-yvelines. அங்கிருந்து ஏர்போர்ட் செல்லவேண்டும் என்றால், அங்கிருந்து மஞ்சள் RER எடுத்து St-Michel-N-Dame (ப்ளூ RER சந்திக்கும் இடம்) வந்து அங்கிருந்து ப்ளூ RER எடுத்து Charles De Gaulle 2 போகவேண்டும். சும்மா மேப்பப் பாக்காம இத மட்டும் படிச்சீங்கன்னா புரியாது. மேப்ப பாத்திட்டு வாங்க. ம்ம் இப்பத் தெரியுதா எங்கிருந்து எங்க போகனும்னு? ஒரு மூளையில இருந்து மற்றொரு மூளைக்குப் போகணும்!















எங்கள் ஹோட்டல் அறையிலிருந்த ஜன்னல் வழியாக எடுத்த படம்.

அன்று மதியமே ஈ·பில் டவர் பார்க்கலாம் என்று நாங்கள் திட்டமிட்டிருந்தோம் ஆனால் பயண அயர்ச்சியிலும் குளிரிலும் எங்களால் தூங்க மட்டுமே முடிந்தது. மதியம் எழுந்து; என்ன சாப்பிடலாம் என்று யோசித்தோம். என்ன என்பதை விட எங்கே என்பது தான் மிக முக்கியமான கேள்வியாக இருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை சாப்பாடு கிடையாது. ரிஷப்ஷனிஸ்ட் கிட்ட கேட்டபொழுது கொஞ்ச தூரத்தில் மெக் டொனால்ட்ஸ் இருக்கிறது என்று வயிற்றில் பாலை வார்த்தாள்.

நானும் என் மனைவியும் குழந்தையும் சில பல ட்ரெஸ்களை அணிந்து கொண்டு ஹோட்டலை விட்டுக் கீழே இறங்கினோம். இறங்கியது தான் தாமதம் குளிர் காத்திருந்தது போல எங்களை வந்து சூழ்ந்து கொண்டது. அடுக்கடுக்காக உடைகளை அணிந்திருந்ததாலோ என்னவோ ஸ்ரீநிதியைத் தூக்குவது கொஞ்சம்கஷ்டமாக இருந்தது. வெளியே கிளம்பியது தான் தாமதம் ஸ்ரீதிதி அடுத்த இரண்டு நிமிஷத்தில் தூங்கிவிட்டாள்.

மெக்டொனால்ட்ஸை தேடிப் புறப்பட்ட எங்களுக்கு படு பயங்கர அதிர்ச்சி. ஊரே வெரிச்சோடிக்கிடக்கிறது. ஐ ஆம் லிஜென்ட் பார்த்திருக்கிறீர்களா? கிட்டத்தட்ட அது போலத்தான். கார்கள் எல்லாம் ஏதோ சிக்னலுக்கு காத்திருப்பதைப் போல வரிசையாக நிற்கின்றன. கார்களுக்குள் யாரும் இல்லை. ஷாப்பிங் மால்கள் எல்லாம் மூடியிருக்கின்றன. எஸ்கலேட்டர்ஸ் வொர்க் ஆகவில்லை. மணி மதியம் ஒன்று தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக கருப்பர்கள். குளிர் வேறு. பயத்தில் என் மனைவியையும் குழந்தையையும் ஹோட்டலுக்கு அழைத்து வந்து விட்டு விட்டு நான் மட்டும் மீண்டும் புறப்பட்டேன்.

Saint Quentin நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத இரண்டுக்கு இடைப்பட்ட ஊர். Carefour இருக்கிறது. ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மால் இருக்கிறது. ஒரு தியேட்டர் இருக்கிறது. நிறைய கம்பெனிகள் இருக்கின்றன. டவுன் சென்ட்டரில் சின்ன ஏரி போன்ற ஒன்று இருக்கிறது. அதைச் சுற்றிலும் நிறைய விதவிதமான் உணவுக்கடைகள் இருக்கின்றன. அங்கு தான் மெக்டொனால்ட்ஸ் இருக்கிறது.

ஒரு வழியாக மெக் டொனால்ட்ஸைக் கண்டுபிடித்து பர்கரும் பக்கத்திலிருந்த ஒரு பிட்சா கடையில் இரண்டு பிட்சாக்களும் வாங்கிக்கொண்டேன். கண்டிப்பாக இரவு உணவு வேறு எதுவும் கிடைக்கப்போவது இல்லை எனவே இதையே இரவுக்கும் வைத்துக்கொள்ளத் திட்டம். எதையும் ப்ளான் பண்ணாமப் பண்ணக்கூடாது.

அன்றைய பொழுது இனிதே கழிந்தது; ஹோட்டல் ரூமுக்குள்ளேயே. மறுநாள் நான் அலுவலகம் செல்ல வேண்டும். எனது அலுவலகத்தைத் தேடிக்கண்டுபிடிப்பது இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதிகாலை குளிர்; ஊர் பற்றிய பயம்; ஊர் மக்களைப் பற்றிய பயம் போன்ற காரணங்களால் இரண்டு முறை அதே இடத்தைச் சுற்றிவந்தும் அலுவலகம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. அது எங்களது தலைமை அலுவலகம். எனவே தனி கேம்ப்பஸ் உண்டு. கடைசியில் ஒரு இந்தியர் தமிழர் தான் வழி சொன்னார். அதற்கு முன்னர் ஒரு கருப்பர்,ஒரு வெள்ளையர், ஒரு வெள்ளை லேடி என்று முறையே எல்லோரிடமும் கேட்டுப்பார்த்தேன். அங்கு தான் நிற்கிறேன்; ஆனால் நான் தேடுகிற இடம் அங்கே தான் இருக்கிறது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.குளிரில் திங்க் ப்ராஸஸ் மிக மெதுவாக நடக்குமாம். நமது அண்டத்தின் கடைசி யுகத்தில்; நட்சத்திரங்கள் எல்லாம் தங்களது எரிபொருட்களை எரித்து முடித்து குறுகி அழிந்து போனப்பின் எங்கும் சூடு இருக்காதாம். குளிர் மட்டும் தான் இருக்கும். கடும் குளிர். நாமெல்லாம் (நம் இனமெல்லாம்) மெஷின்கள் போல ஏதோ ஒரு ஜந்துக்கள் ஆகி இருப்போம்; அப்பொழுது ஒரு யோசனையை யோசிக்க மில்லியன் ஆண்டுகள் ஆகுமாம். ரிலேடிவ்லி மில்லியன் ஆண்டுகள்.

கடைசியில் நமது இந்தியரின் துணையுடன் என் அலுவலகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். அலுவலகம் ஏக்கர் கணக்கில் பறந்து விரிந்து கிடந்தது. நான் செல்லவேண்டிய இடத்தைத் தேடிக்கண்டுபிடித்து சென்றேன். எனக்காக என் கலீக் அங்கு காத்துக்கொண்டிருந்தார்.

மதிய சாப்பாட்டுக்கு டோக்கன் சிஸ்டம் போல ஒரு கார்ட் கொடுத்தனர். நிரந்தரப் பணியாளராக இருப்பதால் நான் அந்தக் கார்டை உபயோகிக்கலாம். கார்டை உபயோகிக்கும் பொழுது உணவுக்கான பணம் மிகவும் குறைவாக இருக்கும். மற்றவர்கள் பத்து யூரோ கொடுக்கும் பொழுது நீங்கள் வெறும் இரண்டு அல்லது மூன்று யூரோ கொடுத்தால் மட்டும் போதும். கிட்டத்தட்ட மெஸ் மாதிரி.

எனக்கு யூரோப்பியர்களிடம் (ப்ரான்ஸ் மக்களிடம்) மிகவும் பிடித்த ஒரு விசயம் அவர்களது உணவுப் பழக்கம். அவ்வளவு அழகாக சுத்தமாக மெதுவாக யாரும் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. என் மனைவி அடிக்கடி சொல்லுவாள்: "எங்க சார் சொல்லுவார்; நாம ரெண்டு மணி நேரம் சமைப்போம் அனா ஐந்து நிமிஷத்தில சாப்பிட்டு முடித்துவிடுவோம். ஆனால் மேலை நாட்டுக்காரர்கள் பத்து நிமிஷம் தான் சமைப்பார்கள் ஆனால் ரெண்டு மணி நேரம் சாப்பிடுவார்கள்" என்னவோ Anthony Bourdainக்கே அந்த சார் தான் சமைக்கக் கற்றுக் கொடுத்தது போல சொன்னாலும் அவர்கள் சாப்பிடும் முறை பற்றி அவர் சொன்னது உண்மைதான் என்று நான் அவர்கள் அருகில் அமர்ந்து சாப்பிட்ட பொழுது உணர்ந்தேன். ஐந்தடுக்கு உணவுப் பழக்கம் இல்லையென்றாலும் கண்டிப்பாக மூன்றடுக்கு உணவு முறையை அனைவரும் கடைப்பிடிக்கின்றனர். கேக், பை பழங்கள் யோகர்ட் என்று அனைத்தையும் ஒரு பிடி பிடித்துவிட்டுத்தான் மதிய உணவை முடிக்கின்றனர்.

ஒரு வாரம் வேலைப் பளுவிலே சென்றது. என் மனைவி குழந்தையை அழைத்துக்கொண்டு மதிய நேரங்களில் அருகில் இருந்த ஷாப்பிங் மால் மற்றும் கேர் ·போரை சுற்றி வந்தார். சில சமயம் சமைத்து சாப்பிட்டோம். குளிர் குளிர் குளிர் தவிர வேறொன்றும் இல்லை. என் வக்கில் அண்ணனின் நண்பர் ஒருவர் அங்கிருக்கிற ஒரு யுனிவெர்சிட்டியில் பிஸிக்ஸில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். அவர் அந்த சனிக்கிழமை எங்கள் ஹோட்டலுக்கு வருவதாக ப்ளான்.

அதே வாரத்தில் ஒரு நாள் காலை மூன்று மணி இருக்கும்; என் மனைவி என்னை எழுப்பினார். இங்க வாங்க என்று என்னை அழைத்து ஜன்னல் பக்கம் காட்டினார். பனிப்பொழிவு. யாரோ மேல் மாடியிலிருந்து நுரையில் முட்டை விடுவது போல பனி எங்கிருந்தோ விழுந்து கொண்டிருந்தது. ஆறு கிளைகள் கொண்ட ஒரு ஸ்நோ ப்ளேக்ஸ் உருவானப் பிறகு அது வானத்திலிருந்து பூமியை வந்தடைந்து அதனுடைய உருவத்தை இழக்க எட்டு முதல் பத்து நிமிடங்கள் ஆகுமாம்.



ஸ்னோ நாவலில் துருக்கிய எழுத்தாளர் ஓரன் பாமுக் ஸ்நோ ·ப்ளேக்ஸ் பற்றி அவ்வளவு அழகாக எழுதியிருப்பார். அவர் பார்வையில்:

Everyone has his own snowflake; individual existences might look identical from afar but to understand one's own eternally mysterious uniqueness, one has only to plot the mysteries of his or her own snowflake




தத்துவம் போதும்; அறிவியல் ரீதியாகவும் Snow flakes ஆச்சரியமான ஒன்று தான்: It has a beautiful six fold symmetry. இந்த அழகு எதனால் என்றால்: ஒரு ஸ்நோ ப்ளேக்ஸை அறுபது டிகிரி திருப்பினால் அதனுடைய வடிவம் மாறாது. அப்படியே இருக்கும். மேலும் ஒரு அறுபது டிகிரி. வடிவம் அப்படியே இருக்கும். மேலும் ஒரு அறுபது டிகிரி. அப்படியே இருக்கும். 360டிகிரியில் அறுபது அறுபது டிகிரியாக திருப்பும் பொழுது (மொத்தம் ஆறு முறை) அதன் வடிவம் அதன் ஒரிஜினல் வடிவத்தோடு ஒத்துப்போகும். இது தான் rotational symmetry. எளிதாகப் புரிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.

ஸ்ரீநிதி முழித்துவிட்டதால் எங்களால் பனிப்பொழிவை அதற்குமேல் ரசிக்க முடியவில்லை. மறு நாள் காலை வழக்கத்தை விடவும் அதிக நேரம் தூங்கிவிட்டோம். கிட்டத்தட்ட பத்துமணிக்குத் தான் நான் அலுவலகம் சென்றேன். லிப்டை விட்டு கீழிறங்கி ஹோட்டலை விட்டு வெளியேறிய எனக்கு இன்ப அதிர்ச்சி ரோடு முழுதும் பனியோ பனி. ஹய்யோ.















பல போட்டோக்கள் எடுத்தேன். முதன் முறையாக பனியை நேரில் பார்க்கிறேன். சந்தோஷமாக இருந்தது. ரோட்டில் போகிற வருகிறவர்களையெல்லாம் கூப்பிட்டு படம் எடுத்துக்கொண்டேன்.
















அதில் நான் கூப்பிட்ட ஒருத்தர் என் கலீக். அலுவகத்தில் என் பக்கத்து ரூமில் இருப்பவர். எனக்குத் தெரியாது. ஆனால் என்னை அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு பேக்கு சிங்கப்பூர்ல இருந்து வந்திருக்கிறது என்று வதந்தி அதிவேகமாகப் பரவியிருந்திருக்கிறது. நான் அவரைக் கூப்பிட்டா போட்டோ எடுக்கச்சொல்வேன். அலுவலகத்தில் அன்று மதியமே வந்து எல்லோர் முன்னிலையிலும் போட்டு உடைத்துவிட்டார். நமக்குத்தான் பனிப்பொழிவு ஆச்சரியம். ஆனால் அவர்களுக்கு அது சாதாரணம். உன் வாழ்க்கையில் இப்பொழுது தான் முதன் முதலில் பனிப்பொழிவைப் பார்க்கிறாயா என்று ஆச்சரியமாகக் கேட்டார்கள். Anyway I dont really care.















நான் தான்

அன்று மதியம் அனுஷாவையும் பாப்பாவையும் அழைத்து வந்து போட்டோ செஷன் முடித்துக்கொண்டோம். அனுஷாவுக்கு ஏக குஷி. போட்டோவில் பாருங்கள். என் கேப்பை பிடுங்கிக்கொண்டார். இங்கே சிங்கப்பூரில் winter timeஇல் கேப் வாங்கும்பொழுதே உனக்கு இதே போல வாங்கிக்கொள் என்றேன் வேண்டாம் எனக்கு மங்கோலியன் கேப் தான் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிக்கொண்டு பாரீஸ் வந்தப்பிறகு அது எனக்குப் பிடிக்கவில்லை உன் கேப் தான் நல்லாயிருக்கு கொடுன்னு பிடுங்கிக்கொண்டார்.















அனுஷா


மூன்று பேரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாம் என்று நினைத்து அந்தப்பக்கம் வந்த ஒரு பெண்ணிடம் கேமராவைக் கொடுத்தேன். அவர் போட்டோ எடுத்துவிட்டு நன்றாக வந்திருக்கிறதா பார்த்துச் சொல்லுங்கள் என்றார். பார்ப்பதற்கு வாங்கினேன். கை நழுவி கீழே விழுந்தது. அவ்வளவு பனி மண்டிக்கிடக்கிறது. ஆனால் என் கேமரா விழுந்த இடத்தில் சரியாக ஒரு கல் இருந்திருக்கிறது. கேமரா உடைந்தது.

இதோ பாரீஸ் ட்ரிப் ஆசை ஆசையாக் வந்த முதல் வாரத்தில் கேமரா உடைந்துவிட்டது. இனி போட்டோ எப்படி எடுப்பது?




Digg Technorati Delicious StumbleUpon Reddit BlinkList Furl Mixx Facebook Google Bookmark Yahoo

Sunday, November 01, 2009

சென்னையில் நடக்கும் உடல் பாகமாற்று மோசடி : நேஷனல் ஜியோகர·பி


குர‌ல்வ‌லை

நான் ஏற்கனவே வாடகைத்தாய் outsourcing பற்றி எழுதியிருந்தேன். இன்று நேஷனல் ஜியோகர·பியில் Inside என்றொரு நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன்; மேலை நாட்டு மக்களின் தேவைகளுக்காக வளர்ந்துவரும் நாடுகளின் மக்கள் ஒரு சொற்ப தொகையை வாங்கிக்கொண்டு தங்களது உடல் பாகங்களை விற்பது தொடர்பான ஒரு டாக்குமென்டரி. கிட்னி விற்பது (கடத்துவது) தொடர்பாக ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பல சினிமாக்கள் தமிழில் வந்துவிட்டன. பல (நம்பர் ஒன் புலனாய்வு) பத்திரிக்கைகள் இதைப் பற்றி ஏற்கனவே பல முறை பல்துளக்கி இருக்கின்றன. விவேக் கூட காமெடி பண்ணியிருக்கிறார். ஆனால் இப்பொழுதும் சென்னையில் இது போன்ற மோசடிகள் நடக்கின்றன என்று நேசனல் ஜியோகரபியில் பார்த்தபொழுது மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

பாகங்கள் மாற்றிப் பொருத்தப்படுவது சென்னையில் மிகப்பெரிய பிஸினஸ். ஒரு கிட்னி மாற்றிப்பொருத்துவதற்கு அமெரிக்கர்கள் (அல்லது பணக்காரர்கள்) நாற்பதாயிரம் டாலர் வரை கொடுக்கிறார்களாம். சுனாமிக்குப் பிறகு வாழ்விழந்த நிறைய பேரி கிட்னியை தானமாக கொடுத்திருக்கிறார்களாம். NGயின் நிருபர் ஒருவர் (வெளிநாட்டவர்) தமிழர் ஒருவரின் துணையுடன் அவர்களை சந்தித்தார். ஒவ்வொருவரும் வயிற்றில் மிகப்பெரிய கீரலைக் காட்டுகின்றனர். ஒவ்வொருவரும். அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பணம் கிடைக்கவில்லை என்று நிருபர் சொல்கிறார். அவர்களும் சொல்கிறார்கள். ஆனால் யாரும் வாயைத்திறக்க முன்வரவில்லை.

கடைசியாக் ஒருவர் பேட்டிக்கு சம்மதித்து ஒரு தனியான இடத்திற்கு நிருபரை அழைத்துச்சென்று தனக்கு நேர்ந்த துயர சம்பவத்தைக் கூறுகிறார். பக்கத்துவீட்டுக்கு அடிக்கடி நிறைய பேர் வந்து போவதை அறிந்த அவர் என்னவென்று விசாரிக்க அங்கே ஆரம்பித்தது அவருக்கு சோதனை. பக்கத்துவீட்டுப் பெண் அவர்கள் கிட்னி விற்கிறார்கள் என்றும் ஒன்றரை லட்சம் வரை கிடைக்கும் என்றும் ஆசை காட்ட இவரும் தனக்கிருக்கும் கஷ்டங்களை நினைத்து தனது கிட்னியை விற்கமுடிவு செய்திருக்கிறார். ஒரு புரோக்கரின் துணையுடன் விற்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஏகப்பட்ட டெஸ்ட்களுக்குப் பிறகு மதுரையில் உள்ள ஒரு ஹாஸ்பிட்டலில் இந்த பாகம் மாற்றுதல் நடந்தேறியிருக்கிறது. எல்லாம் முடிந்த பிறகு அந்தப் பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட தொகை வெறும் எழுநூறு டாலர்கள். நாற்பதாயிரம் எங்கிருக்கிறது எழுநூறு எங்கிருக்கிறது?

நியாயம் கேட்டதற்கு அவர் மிரட்டப்பட்டிருக்கிறார். கொலை மிரட்டலும் வந்திருக்கிறது. NGயின் ரிப்போர்ட்டர் அந்த புரோக்கரைத் தேடிப்பிடித்து அவரிடம் செல்கிறது. அவர் டீக்கடை வைத்திருக்கிறார். அவரது மனைவியோ யாரோ போயிடுங்க போயிடுங்க என்று சொல்கிறார். புரோக்கர் பேச விருப்பம் தெரிவிக்கவில்லை. பிறகு என்ன நடந்ததோ அவரே பேச வருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு என்ன கிடைக்கவேண்டுமோ அது கிடைத்திருக்கிறது. மூன்று வருடம் கழித்து ஏன் அவர் இதைப் பெரிது படுத்தவேண்டும்? என்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு டீன் ஏஜில் ஒரு பையன் இருக்கிறான். அந்தப்பையனின் கால்கள் வீங்கிக்கொண்டிருக்கிறது. கிட்னி ·பெயிலியர். அம்மா ஏற்கனவே சொற்ப பணத்துக்கு கிட்னியை விற்றுவிட்டாள். மகனுக்குக் கொடுக்க அம்மாவிடம் கிட்னி இல்லை. விதி என்று சொல்லமாட்டேன்.

இந்த பாகமாற்று முறைக்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கிறதாம். டாக்டர்கள், புரோக்கர்கள், டிராவல் ஏஜென்டுகள், பணம் மாற்றும் கள்ள மார்கெட்டுகள், அதிகாரிகள். வெளிநாட்டவருக்கு பாகங்கள் மாற்றிப்பொருத்துவதை சட்டம் அனுமதிக்க வேண்டுமா இல்லையா என்பது தனி டிபேட்டாக இருக்கட்டும், அதற்கு முன் ஏனப்பா பாவம் கிட்னி விக்க வர்றவங்ககிட்ட கூட மோசடிபன்றவங்களக் கூட கண்டுக்கமாட்டீங்களா?

NG புலனாய்வு செய்ததை நமது நம்பர் ஒன் புலனாய்வு பத்திரிக்கைகள் ஏன் செய்யவில்லை? அவர்களுக்கு விரல் நாயகனையும் குரல் நாயகியைப் பற்றியும் துப்புதுலக்கவே நேரமில்லை.பாவம் விட்டுவிடுங்கள்.

இந்த பாகமாற்று க்ரைம் சைனாவையும் விடவில்லை ஏன் நியுயார்க்கைக் கூட விடவில்லை. சைனாவில் கைதிகளிடமிருந்து பாகங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. நியுயார்க் இன்னும் மோசம். பிணப்பெட்டியில் அடக்கம் பண்ணப்பட்ட பிணங்களில் இருந்து எழும்புகள் மற்றும் பல பாகங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. யாருடைய அனுமதியும் இல்லாமல்.

மோசடி வெளிச்சத்துக்கு வரும் வரை; நியுயார்க் முழுவதும் நான்கு இடுகாடுகள் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருந்தனவாம்.

வறுமையில் வாடும் மக்களை பணமுதலைகள் தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்துவது என்று தான் முடிவுக்கு வருமோ தெரியவில்லை. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் மோசடிக்கு பெரிதும் உதவும் புரோக்கர்களும் என்று தான் பிடிபடுவார்களோ தெரியவில்லை. சுனாமி போன்ற பெரிடர்கள் தாக்கும்பொழுது வழுவிழந்த மக்களைக் குறிவைத்து பண முதலைகளும் புரோக்கர்களும் பல காய்கள் நகர்த்துவார்கள். இவர்களுக்கு செக் வைப்பது யார்? இதைத் தடுக்க என்ன செய்யலாம்?




Digg Technorati Delicious StumbleUpon Reddit BlinkList Furl Mixx Facebook Google Bookmark Yahoo

Symphony Of Science


குர‌ல்வ‌லை

இன்று யூடியூபில் அருமையான ஒரு வீடியோ பார்த்தேன். டைசன்,சாகன்,·பெயின்மேன் போன்ற விஞ்ஞானிகள் கொடுத்த பேட்டிகளிலிருந்து உருவப்பட்ட சில வாக்கியங்களை அப்படியே அருமையான பாடலாக மாற்றியிருந்தார் ஒருவர். வீடியோவை இங்கே பாருங்கள்.

டைசனின் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்

என் உடம்பில் இருக்கின்ற
அணுக்களை
அண்டம் வரையிலும்
தொடர்புபடுத்த முடியும்

தெருவில் நடந்துசெல்லும்
மனிதர்களைப் பிடித்து
தோளைக் குலுக்கி
உங்களுக்கு இது தெரியுமா
என்று கேட்கவேண்டும் போல்
இருக்கிறது

உண்மைதான்;சில விசயங்களைப் பற்றி படிக்கும் பொழுது அப்படித்தான் இருக்கும்.

**

[டைசன்]
நம் எல்லோருக்கும் தொடர்பு உண்டு
ஒருவரோடு ஒருவர் :உயிரியல் ரீதியாக
பூமியோடு : வேதியல் ரீதியாக
மீதமிருக்கும் அண்டம் முழுதுடனும் : அணுக்கள் வழியாக

[·பெயின்மேன்]
இயற்கையின் கற்பனைவளம்
மனிதனை விட பல மடங்கு பெரியது
அவள் நம்மை ஓய்வாக இருக்கவிடமாட்டாள்

[சாகன்]
நடுவிலிருக்கு அண்டத்தில்
நாம் வாழ்கிறோம்
மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
சரிதான்
ஆனால் எல்லா மாற்றங்களும் விதிகளுக்குட்பட்டது
அதற்கு ஒரு மாதிரி இருக்கிறது
அதைத்தான் நாம்
இயற்கையின் விதிகள் என்கிறோம்.

[நேய்]
இந்த கிரகத்தின்
மேல் நான் நிற்கிறேன்
நான் ஒரு துகள் தான்
நட்சத்திரத்துடன் ஒப்பிடும் போது
இந்த கிரகம் ஒரு துகள் தான்
இதையெல்லாம் யோசிக்க..
பரந்து விரிந்து கிடக்கும்
வெறுமையான் அண்டத்தைப் பற்றி
யோசிக்க..
பில்லியன் பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன
பில்லியன் பில்லியன் துகள்கள் இருக்கின்றன..

[சாகன்]
உயிரினங்களின் அழகு
அதனுள்ளே இருக்கும் அணுக்கள் இல்லை
அந்த அணுக்கள் எல்லாம் எப்படி ஒன்றாக இருக்கின்றன
என்பதில் தான் இருக்கிறது.
அண்டம் நம்முள்ளும் இருக்கிறது
நாம் நட்சத்திரத்தால் செய்யப்படிருக்கிறோம்
அண்டத்தை அறிந்துகொள்ள
நாம் தான் வழி

எல்லையற்ற அண்டத்தில்
நட்சத்திரங்கள் சூரியன்கள்
இதுபோல நாம் பயனித்திருக்கிறோம்
இன்னும் நிறைய படிக்கவேண்டியதிருக்கிறது.

அணுக்களின் பரிணாம வளர்ச்சியை
அனுமதிக்கிற ஒரு அண்டத்தில்
வாழ்கிறேன் என்கிற சிந்தனை
எனக்கு பேரானந்தத்தைக்
கொடுக்கிறது.

[டைசன்]
என் உடம்பில் இருக்கின்ற
அணுக்களை
அண்டம் வரையிலும்
தொடர்புபடுத்த முடியும்

தெருவில் நடந்துசெல்லும்
மனிதர்களைப் பிடித்து
தோளைக் குலுக்கி
உங்களுக்கு இது தெரியுமா
என்று கேட்கவேண்டும் போல்
இருக்கிறது

[·பெயின்மேன்]
அண்டம் முழுவதும்
கணக்கிலடங்கா
எண்ணற்ற
குழப்பமான அலைகள்
இருக்கின்றன
ஒளி நம் அறையில்
இங்கும் அங்கும் பட்டுத்
தெரிக்கிறது
ஒரு பொருளில் இருந்து
மற்றொரு பொருளுக்கு
தாவுகிறது

அவை எல்லாமே இங்கு இருக்கிறது
நீங்கள் இதைப் பற்றி யோசிக்கவேண்டும்
இந்த சிக்கலைப் பற்றி யோசிக்க வேண்டும்
இது உங்களுக்கு ஆனந்தத்தைத் தரும்

அவை எல்லாமே இங்கு இருக்கிறது
புரிந்துகொள்ள முடியாத இயற்கையின் இயற்கை.

*




Digg Technorati Delicious StumbleUpon Reddit BlinkList Furl Mixx Facebook Google Bookmark Yahoo

Sunday, October 04, 2009

யார் முழித்திருக்கப் போகிறார்கள் - 9 (முடிந்தது)


குர‌ல்வ‌லை

3 டிசம்பர் 2005

இந்த தேதி நம்மில், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை தவிற வேறு எதையாவது நினைவு படுத்துகிறதா?

ஆனால் மிகவும் முக்கியமான நாள் இது. இருபத்தியோரு வருடங்களுக்கு முன்னர் சிறு குழந்தைகள் - சிறுவர்களும் சிறுமிகளும் - மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட ஒரு வாயுவால் பாதிக்கப்பட்டனர். இன்றைக்கு இந்த சிறுமிகளும் சிறுவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு வழந்திருப்பார்கள். பிறக்கப்போகும் இந்த குழந்தைகள் குறைகளோடு பிறப்பார்களா? விஷவாயுவின் நச்சுத்தன்மை பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் இருந்துகொண்டு பிறக்கப்போகும் குழந்தைகளை பாதிக்குமா? இது வரை மறுக்கப்பட்ட இந்த விசயத்தை புள்ளிவிபரங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவருமா?

போப்பால் பேரிடர் இன்னும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறதா?மார்ச் 21 2001 அன்று கைவிடப்பட்ட அந்தத் தொழிற்சாலையின் வளாகத்தில் தீப்பிடித்துக்கொண்டது. அந்தத் தீ அருகில் இருந்த 32 குடிசைகளை சிதைத்தது. அங்கு வாழ்ந்தவர்கள் மிளகாய் எறிந்து கருகும் வாடையை சுவாசித்ததாகச் சொன்னார்கள். அவர்கள் கண்களிலிருந்து நீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. எறிந்துகொண்டிருந்த தீ அவர்களை முச்சுத்திணறடித்தது அவர்கள் சுவாசிக்க இயலாமல் தொண்டை அடைக்க டிசம்பர் 3 1984 ஐ நினைவுகூர்ந்தனர். வரலாறு திரும்பியது.

பிப்ரவரி 2001இல் டவ் கெமிக்கல்ஸ் (DOW) என்கிற மிசிக்கனைச் சேர்ந்த நிறுவனம் 11.6 பில்லியன் டாலர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கி உலகின் இரண்டாவது பெரிய ரசாயனத் தொழிற்சாலையாக மாறியது. ஆனால் டவ் போப்பாலில் நடந்து முடிந்த துயரச்சம்பவத்துக்கு எந்த அளவிலும் பொறுப்பேர்க்க முடியாது என்று கூறிவிட்டது. கொடுக்கப்பட்ட 470 மில்லியன் டாலர் தான் இறுதியான இழப்பீட்டுத் தொகை, UCC அதைக் கொடுத்துவிட்டது எனவே அது சம்பந்தமான எந்த இழப்பீடும் இனி நாங்கள் கொடுக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. டவ்வின் முக்கியமான மேலாளார் ஒருவர் இவ்வாறு சொன்னார்: "நாங்கள் மனித நேயத்துக்காக மட்டுமே சில விசயங்களை செய்துகொண்டிருக்கிறோம், இதைக் கொண்டு நாங்கள் இழப்பீடு தருவதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம் என்று குழம்பிக்கொள்ள வேண்டாம்".

ஆனால் இதே நிறுவனம் டெக்ஸாஸில் இருக்கும் UC நிறுவனத்தை வாங்கி ஒருவருடத்துக்குள் அப்பொழுது UCயின் மேல் தொடரப்பட்டிருந்த அஸ்பெஸ்டாஸ் சம்பந்தப்பட்ட வழக்குக்கு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனால் இந்த நிறுவனத்துக்கு 7 பில்லியன் டாலர் நஷ்டமானது. டவ் டெக்ஸாஸில் இருந்த UCஐ வாங்குவதற்கு முன்னர் இந்த வழக்கு சம்பந்தமாக ஏதும் இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கவில்லை அதனால் தான் நாங்கள் வாங்கியவுடன் நடந்துகொண்டிருந்த வழக்குக்கு பொறுப்பேற்றுக்கொண்டு இழப்பீட்டுத் தொகையும் கொடுத்தோம், ஆனால் போப்பாலில் நடந்தது வேறுமாதிரி. அங்கு ஏற்கனவே நாங்கள் வாங்குவதற்கு முன்னரே ஒரு இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டாயிற்று என்று நிஜத்தை எதிர்கொள்ளாமல் தப்பித்துக்கொண்டது.

அதேசமயத்தில் 23 மே 2002 இல், இந்திய அரசின் சார்பாக, சிபிஐ போப்பாலின் நீதிமன்றத்திடம் ஒரு கோரிக்கையை வைத்தது:வாரன் ஆன்டர்சன் மீது சுமத்தப்பட்டிருக்கும் கிரிமினல் குற்றங்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதே அது. பத்துவருட கடுங்காவல் தண்டனைக்கு உரியதான கொலைக்குற்றத்திலிருந்து கீழிறக்கி இரண்டு வருட தண்டனை மட்டுமே கொடுக்கக்கூடிய குற்றங்களை மட்டுமே சுமத்தவேண்டும் என்கிற கோரிக்கை அது.

29 ஆகஸ்ட் 2002 அன்று நீதிமன்றம் இந்தக் கோரிக்கையை நிராகரித்தது. ஆன்டர்சனைக் கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகிவிட்ட அவர் இதுவரையில் எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகவில்லை.எனவே தண்டனையைக் குறைக்கவேண்டும் என்கிற கோரிக்கை முட்டாள்த்தனமானது என்றது நீதிமன்றம். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நிதிக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்று கொண்டாடப்பட்டது.

இந்தத் துயரசம்பவம் நடந்து இருபது ஆண்டுகள் ஆனபொழுது எல்லோருடைய மனநிலையும் கொண்டாட்டத்துக்கு மாறியிருந்தது. மார்ச் 2004 அன்று அமெரிக்க ·பெடரல் கோர்ட் UCCயை பாதிப்படைந்த இடத்தை சர்வதேசத் தரத்தில் சுத்தாமாக்க முழுப்பொறுப்பும் ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. மத்தியப்பிரதேச மாநில அரசும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறையும் இந்தமாதிரியான வேலை செய்வதற்கு தங்களிடம் பணமோ தொழில்நுட்பவசதியோ இல்லையென்று சொல்லிவிட்டது. ·பெடர்ல் நீதிமன்றம், ஒரு அந்நிய நாட்டின் நிறுவனம் இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் இவ்வாறான சுத்தப்படுத்தும் காரியம் செய்வதை இந்தியா அனுமதிக்கிறதா என்று கேட்டிருந்தது. கொஞ்சம் இழுபறிக்குப் பிறகு ஜந்தர் மந்தரில் துயரசம்பவத்தில் தப்பிப்பிழைத்த மக்கள் மகிழ்ச்சியுறும் வகையில் இந்திய அரசாங்கம் இதற்கு ஒப்புக்கொண்டது.

இதுவொரு முக்கியமான முடிவு. ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒரு "மூன்றாம் உலகத்தை" சேர்ந்த நாட்டில் தான் செய்து விட்ட தவறுக்கு பரிகாரம் செய்ய வற்புறுத்தப்பட்டது இதுவே முதல்முறை. 1989 இல் கொடுத்த இழப்பீட்டுத் தொகைக்குப் பிறகு நடந்துமுடிந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கத் தேவையில்லை என்கிற UCCயின் வாதம் இனி ஒருபோதும் செல்லாது.

19 ஜீலை 2004 அன்று மேலுமொரு வெற்றி கிடைத்தது.இந்திய உச்சநீதி மன்றம் மீதமிருக்கும் இழப்பீட்டுத்தொகையான 1500 கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட 5,66,876 மக்களும் பிரித்துக்கொடுக்குமாறு வழியுறுத்தியது. நீதிக்காக இருபது வருடங்கள் காத்திருப்பது மிகவும் தாமதமான ஒன்று என்பது நம்மில் பலருக்குத் தோன்றலாம், ஆனால் பாதிப்படைந்த மக்களுக்கு இது பல சோதனைகளுக்குப் பிறகு போராடிய அவர்களது மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி.

Wall Street Journalஇல் அமெரிக்க கார்பரேட் நிறுவனங்களின் பல மேலாளர்கள் இந்த வழக்கை தொடர்ந்து கவனித்து வருவதாக சொல்லப்பட்டது. முதன்முறையாக அமெரிக்க நிறுவனம் ஒன்று வளர்ந்துவரும் மூன்றாம் உலகத்தில் தான் செய்த தவறுக்கு என்ன பரிகாரம் செய்யப்போகிறது என்று அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்ட அன்று, UCCயின் பங்குகள் இரண்டு டாலர்கள் உயர்ந்தது. நிறுவனத்தின் சொத்து அப்படியே இருக்கிறது என்று மக்கள் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். சராசரியாக பாதிப்படைந்த ஒரு நபர் வெறும் 500 டாலர்கள் மட்டுமே பெற்றதை நினைத்து அவர்கள் யாரும் வறுத்தப்படவில்லை. இந்த 500 டாலர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவச்செலவுக்குக் கூட போதாது என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன?

லாப நோக்கோடு அலையும் கார்பரேட் நிறுவனங்கள் ஒரு காலத்தில் உலகையே அடிமையாக்கிவிடும் என்கிற அபாயகரமான உண்மையை நம்மில் பலரும் வசதியாக மறந்துவிடுகிறோம். நிறுவனத்தின் வெற்றிக்கு முன்பு மனிதநேயம் பொருட்டேயல்ல என்கிற படு பயங்கர தத்துவத்தை நாம் தீனி போட்டு வளர்த்துவருகிறோம்.

பூச்சிக்கொள்ளி மருந்துகளால் கேன்சர் வரும். எனவே அவை அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகச் சுதந்திரமாக அது விற்கப்படுகிறது. டர்ஸ்பன் (Dursban) என்கிற பூச்சிக்கொள்ளி மருந்து குழந்தைகளுக்கு மூளை பாதிப்பை உண்டாக்கும் என்பதை தெரிந்திருந்தும் DOW நிறுவனம் அதை கவலைப்படாமல் சுதந்திரமாக விற்றுவருகிறது. டூபான்ட் (DuPont) நிறுவனம் ஓசோன் படலத்தை சிதைத்து தோல் கேன்சரை உருவாக்கும் chloroflurocorbans என்கிற ரசாயனத்தை உருவாக்கத்தான் செய்கிறது. பாலூட்டும் அன்னை தன் குழந்தைக்கு டையாக்ஸினை அவளறியாமலே புகட்டிக்கொண்டிருக்கிறாள். நம் உடலை நாமே கடுப்படுத்தவியலாத ஒரு புதிய வன்முறையை நாம் உருவாக்கிவிட்டோம்.

"ரசாயன தொழிலில் ஒரு ஹிரோஷிமா" வான போப்பால் ஒரு முக்கியமான அடையாளமாக இருந்து வந்திருக்கிறது. தொழிலாளர்களால் வழிநடத்தப்பட்டு ஒரு தன்னார்வ புரட்சி இயக்கமாக வளர்ந்து போராட்ட குணத்தையும் எதிர்ப்பு சக்தியையும் தன்னுள் அடக்கி வருடங்கள் பல கடந்த பின்னும் அந்த இயக்கம் இன்னும் அதே மூர்க்கத்துடன் இயங்கி வருகிறது.

போப்பால் தன் பெண்களை அவர்களது சிறையிலிருந்து மீட்டுக்கொண்டுவர ஒரு காரணியாக இருந்தது. அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூங்காக்களில் கூடி போராட்டத்துக்கான வழிமுறைகளை ஆராய்ந்தனர்.அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடும் ஒரு அணியை அவர்கள் உலகம் முழுவதிலும் உருவாக்கிவிட்டிருந்தனர். அவர்கள் தங்களது குரல்கள் சத்தமாகவும் சுத்தமாகவும் ஒலிக்கவேண்டும் என்று விரும்பினர். அதையே செய்தும் காட்டினர்.

சுற்றுப்புற சூழ்நிலைக்கு கொடுக்கப்படும் நோபல் பரிசாகக் கருதப்படும் Goldman Environment பரிசு, பாதிப்படைந்த மக்களின் நீதிக்கு போராடியதற்காக, ரஷிடா பி (Rashida Bi) மற்றும் சம்பா தேவி சுக்லா(Champa Devi Shukla) ஆகிய இரு பெண்களுக்கும் ஏப்ரல் 2004 இல் கொடுக்கப்பட்டது.

விருது வழங்கும் விழாவில் இந்த இரு பெண்களும் கீழ் வருமாறு பேசினர்:
டவ் நிறுவனம் தான் இன்னும் நீண்டுகொண்டிருக்கும் அந்த துயரசம்பவத்துக்கு பொறுபேர்க்க வேண்டும் என்கிற தீர்ப்பு வந்த அந்த நாள் உலகம் முழுவதும் இருக்கும் சாமான்ய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.அந்த நாளில் இருந்து நச்சுத்தன்மை மிகுந்த ரசாயனத்தை தயாரிக்கும் எந்த நிறுவனமும் மனிதநேயத்துக்கு முன் லாப நோக்கத்தை முன்வைப்பதைப் பற்றி ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கும். நாங்கள் அடிபனிந்து போகிறவர்கள் அல்ல. இந்த உலகத்தின் வாழ்வாதாரத்தையும் உயிரின் ஆதாரத்தையும் அச்சுறுத்தும் எவரையும் நாங்கள் எதிர்த்துப் போராடுவோம். அதன்மூலம் நாங்கள் இருட்டை வென்றிடுவோம்.


குரல்கள்:
போப்பாலில் நடந்த துயரசம்பவத்துக்கு ஈடாக போர்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை மட்டுமே ஒப்பிடமுடியும். இந்த சம்பவம் நடந்த அன்று போப்பால் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் வெளியாகிய 45 டன் MICஇல் போஸ்ஜீன்(phosgene) சிறிதளவு கலந்திருக்கிறது. போஸ்ஜீன் முதலாம் உலகயுத்தத்திலும், இரண்டாம உலக யுத்தத்திலும் மேலும் ஈரான் - ஈராக் யுத்தத்திலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரசாயனத்தின் தன்மையையும் அது கனிசனமான அளவு சுற்றுப்புறத்தில் கலந்திருப்பதையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், இதனுடைய விளைவுகள் இன்னும் பல காலத்துக்கு தொடர்ந்துகொண்டிருக்கும். திட்டவட்டமான ஒரு இழப்பின் மதிப்பீட்டுக்கு வர இயலாது என்பது உண்மை.
-18 டிசம்பர் 1984 அன்று டெல்லி அறிவியல் கழகம் பத்திரிக்கைகளுக்கு அளித்த ஒரு அறிக்கை.


டிசம்பர் 3

இறந்துவிட்டவர்களை நினைவு கூர்வதோடு மட்டுமில்லாமல், வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களின் நீதிக்காகவும் இனி பிறக்கப்போகும் குழந்தைகளின் நலனுக்காவும் போராட வேண்டும் என்கிற உறுதியை இந்த நாளில் நாம் எடுக்கவேண்டும்.

**
(முடிந்தது)
மூலம்: BHOPAL GAS TRAGEDY- THE WORST INDUSTRIAL DISASTER IN HUMAN HISTORY By SUROOPA MUKHERJEE.




Digg Technorati Delicious StumbleUpon Reddit BlinkList Furl Mixx Facebook Google Bookmark Yahoo